பதிவு செய்த நாள்
06 ஜூன்2018
00:27
தமிழகத்தில், ஆறு ஆண்டுகளில், வெளிநாட்டு நிறுவனங்கள், 1.19 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக, தொழில் துறை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நாடு முழுவதிலும், அன்னிய முதலீடுகளை பெறுவதில், தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. தமிழகத்தில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், இன்ஜினியரிங் துறை நிறுவனங்கள் என, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், முதலீடு செய்து உற்பத்தியை துவங்கியுள்ளன.
இந்நிலையில், ஆறு ஆண்டுகளில், தொழில் துறையில் அன்னிய முதலீடு அதிகரித்துள்ளது.இது குறித்து, தொழில் துறை மேம்பாட்டு நிறுவனத்தின், மூத்த அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், ஜப்பான், கொரியா, தென் கொரியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மன், லண்டன் போன்ற நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு நிறுவனங்கள், தங்களது உற்பத்தி பிரிவை துவங்கியுள்ளன.
இதன் காரணமாக, 2011ம் ஆண்டு மே முதல், 2017ம் ஆண்டு டிசம்பர் வரை, 1.19 லட்சம் கோடி ரூபாய் அன்னிய முதலீடு பெறப்பட்டுள்ளது. இந்த முதலீட்டின் அளவு, 2000ம் ஆண்டு ஏப்ரல் முதல், 2011ம் ஆண்டு ஏப்ரல் வரை, 33 ஆயிரத்து, 24 கோடி ரூபாயாக இருந்தது.
தற்போது, இதை விட, 3.3 மடங்கு அதிகம் உயர்ந்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள், தமிழகத்தில் முதலீடு செய்ய, பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|