பதிவு செய்த நாள்
06 ஜூன்2018
00:29
மும்பை:மும்பையில் நேற்று, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில், ஆறு உறுப்பினர்கள் அடங்கிய நிதிக் கொள்கை குழுவின் ஆலோசனை கூட்டம், இரண்டாவது நாளாக நடைபெற்றது.
வழக்கமாக, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை, இரண்டு நாட்கள் நடைபெறும் இக்குழுவின் கூட்டம், முதன் முறையாக மூன்று நாட்கள் நடைபெறுகிறது.நேற்றைய கூட்டத்தில், கச்சா எண்ணெய் விலையேற்றம், பணவீக்க உயர்வு உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில், இறுதி நாளான இன்று, நிதிக் கொள்கை குழுவின் அறிக்கை வெளியிடப்படும்.
அதில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி உயர்த்தப்படுமா அல்லது தற்போதைய நிலையே தொடருமா என்பது தெரியவரும்.கடந்த, 2014, ஜனவரியில், ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டியை, 8 சதவீதமாக உயர்த்தியது. அதன் பின், படிப்படியாக வட்டி குறைக்கப்பட்டு, தற்போது, 6 சதவீதமாக உள்ளது.
கச்சா எண்ணெய் விலையேற்றம், ரூபாய் மதிப்பு சரிவு, சில்லரை பணவீக்க உயர்வு போன்றவற்றால், ரெப்போ வட்டி, 0.25 சதவீதம் உயர அதிகம் வாய்ப்பு உள்ளதாக, வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|