பதிவு செய்த நாள்
06 ஜூன்2018
00:31
கோபி:சிறுவலுாரில், 2.47 லட்சம் ரூபாய்க்கு கருப்பட்டி விற்பனையானது.ஈரோடு மாவட்டம், சிறுவலுார் அருகே பதிப்பாளையம், கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், நேற்று முன்தினம் தென்னங்கருப்பட்டி, பனங்கருப்பட்டி ஏலம் நடந்தது.
தென்னங்கருப்பட்டி, 1,000 கிலோ வரத்தாகி, கிலோ, 90.10 ரூபாய்க்கும்; பனங்கருப்பட்டி, 1,200 கிலோ வரத்தாகி, கிலோ, 131.10 ரூபாய்க்கும் விலை போயின. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், தென்னங்கருப்பட்டி கிலோவுக்கு, 4.90 ரூபாய், பனங்கருப்பட்டி, 1.40 ரூபாய் அளவுக்கு விலை சரிந்தது. வரத்தான, 2,200 கிலோ கருப்பட்டியும், 2.47 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக, உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
நாவல் பழம் சீசன் 1 கிலோ ரூ.220
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் சீசன் துவங்கியும் வரத்து குறைவால், நாவல் பழம், 1 கிலோ, 220 ரூபாய்க்கு விற்பனையானது. மே, ஜூன், ஜூலை, நாவல் பழத்துக் கான சீசன் காலம். திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, நத்தம், நிலக்கோட்டை, ரெட்டியார்சத்திரம், சாணார்பட்டி பகுதிகளில், 10 ஹெக்டேரில் நாவல் சாகுபடியாகிறது.
சீசன் காலத்தில், திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு தினமும், 500 கிலோ நாவல் பழம் விற்பனைக்கு வரும்.தற்போது, நாவல் பழம் சீசன் துவங்கியுள்ளது. உள்ளூர் வரத்து சரிவர இல்லாததால், ஆந்திராவில் இருந்து தினமும், 400 கிலோ விற்பனைக்கு வருகிறது. இதனால் கிலோ, 220 ரூபாய்க்கு விற்பனையானது.
ரூ.2.10 கோடிக்குமாடுகள் விற்பனை
காரிமங்கலம்:தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் நேற்று கூடிய வாரச் சந்தையில், 2.10 கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனையாகின.கறுப்பு, வெள்ளை மாடு, 49 ஆயிரம் முதல், 82 ஆயிரம் ரூபாய்; ஜெர்சி, 40 – 63 ஆயிரம் ரூபாய், சிந்து, 41 – 56 ஆயிரம் ரூபாய், நாட்டு மாடு, 40 – 85 ஆயிரம் ரூபாய், எருமை, 20-- – 38 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகின.‘மொத்தம், 735 மாடுகள் விற்பனையானதால், இரண்டு கோடியே, 10 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது’ என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|