பதிவு செய்த நாள்
06 ஜூன்2018
00:33
புதுடில்லி:வலைதளங்களில் புதுமையான தொழில்களில் ஈடுபடும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை ஊக்குவிப்பதில், முன்னணியில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் பட்டியலை, மத்திய அரசு வெளியிட உள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு பிரிவு, மாநில வாரியாக ஸ்டார்ட் அப் துறை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க மேற்கொண்ட நடவடிக்கைகள்; அளித்து வரும் ஆதரவு உள்ளிட்ட, 38 விதமான செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வார்த்தெடுக்க உதவும் காப்பக மையங்கள், சுலபமான பதிவு நடைமுறைகள், பல கட்டங்களில் அளிக்கப்படும் முதலீடுகள் உள்ளிட்ட அம்சங்களும், ஆய்வில் அடங்கும்.அவற்றின் அடிப்படையில், ஸ்டார்ட் அப் துறைக்கு ஊக்கமளிக்கும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இது, மாநிலங்கள் இடையிலான போட்டியை உருவாக்கி, ஸ்டார்ட் அப் துறையின் வளர்ச்சிக்கு உதவும். மத்திய அரசு, இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்க, ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டத்தின் கீழ், பல்வேறு சலுகைகள் வழங்கி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|