பதிவு செய்த நாள்
06 ஜூன்2018
00:34
புதுடில்லி:கடந்த மே மாதம், நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக, ‘நிக்கி – மார்கிட்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
கச்சா எண்ணெய் விலை உயர்வால், மூலப் பொருட்கள் செலவினம் அதிகரித்துள்ளது. சேவை நிறுவனங்களுக்கு புதிய, ‘ஆர்டர்’ கிடைப்பதிலும் தேக்க நிலை காணப்பட்டது. இதனால், மே மாதம் சேவைகள் துறை வளர்ச்சி பின்னடைவைக் கண்டு உள்ளது.தொடர்ந்து, இரண்டு மாதங்களாக சேவைகள் துறை வளர்ச்சி கண்டு வந்த நிலையில், முதன் முறையாக, இத்தகைய சரிவை சந்தித்துள்ளது.
அதனால், சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், நிக்கி இந்தியா, எஸ்.பி.ஏ.ஐ., குறியீடு, 49.6 புள்ளியாக குறைந்து உள்ளது. இது, ஏப்ரலில், 51.4 புள்ளியாக இருந்தது. இக்குறியீடு, 50 புள்ளியை தாண்டினால், வளர்ச்சியாக கருதப்படும். இந்தாண்டு பிப்ரவரியில், இக்குறியீடு, பின்னடைவை கண்டது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி முதல் மே வரை, இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரம், மிக மந்தமான வளர்ச்சியை கண்டுள்ளது. கச்சா எண்ணெய் விலையேற்றத்தால், தனியார் துறையின் மூலப்பொருட்கள் செலவின அடிப்படையிலான பணவீக்கம், மூன்று மாதங்களாக அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பு வளர்ச்சியும் மிதமாகவே இருந்தது. ஏப்ரலில், ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, வேலைவாய்ப்பு வளர்ச்சி அதிகரித்து காணப்பட்டது.
போட்டி அதிகரிப்பு, புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட தொய்வு போன்றவையால், சேவைகள் துறை வளர்ச்சி பின்னடைவை கண்டுஉள்ளது.மே மாதம், தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் ஒருங்கிணைந்த, நிக்கி இந்தியா, சி.பி.எம்.ஐ.ஓ.ஐ., குறியீடு, 50.4 புள்ளியாக குறைந்துள்ளது. இது, ஏப்ரலில், 51.9 புள்ளியாக இருந்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|