பதிவு செய்த நாள்
06 ஜூன்2018
18:05
புதுடில்லி : ரிசர்வ் வங்கியின் ஜூன் மாத பணக்கொள்கை குறித்த கூட்டம் டில்லியில் இன்று நடைபெற்றது. இதன் பிறகு வெளியிடப்பட்ட அறிவிப்பில் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல், ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரெப்போ வட்டிவிகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2018 - 19-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் பணவீக்கம் 4.8 சதவீதம் முதல் 4.9 சதவீதம் வரை இருக்கும். இரண்டாம் அரையாண்டில் 4.7 சதவீதமாக இருக்கும்.
ஜிடிபி முதல் அரையாண்டில் 7.5 முதல் 7.6 ஆகவும், 2வது அரையாண்டில் 7.3 முதல் 7.4 ஆக இருக்கும். கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது. இதில் நிலைத்தன்மை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
2014-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு தற்போது மீண்டும் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால் வீட்டுக்கடன் மற்றும் வாகன கடன் வட்டி விகிதம் உயர வாய்ப்பு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|