தங்கம் விலை சிறிது உயர்வுதங்கம் விலை சிறிது உயர்வு ... பிற மாநில நிலக்கடலை வரத்து அதிகரிப்பு பிற மாநில நிலக்கடலை வரத்து அதிகரிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘ஜிம்’ மாநாட்டில் பங்கேற்ற 23 நிறுவனங்கள் உற்பத்தி துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2018
00:19

தமி­ழ­கத்­தில், 2015ல் நடந்த, சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டில் பங்­கேற்ற, 23 நிறு­வ­னங்­கள், உற்­பத்­தியை துவங்­கி­யுள்­ள­தாக, தமிழ்­நாடு தொழில் மேம்­பாட்டு நிறுவன அதிகா­ரி­கள்தெரி­வித்­த­னர்.
தமி­ழக அரசு, 2015ல், ‘ஜிம்’ எனும் சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்டை, சென்­னை­யில் நடத்­தி­யது. இதில், ஒன்­பது நாடு­களைச் சேர்ந்த, 23 நிறு­வனங்­கள் பங்­கேற்று, 2.42 லட்­சம் கோடி ரூபாய் முதலீடு பெறப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது.இதில், பல நிறு­வ­னங்­கள் உற்­பத்­தியை துவங்­கி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

உற்பத்தி பணிகள்

இது குறித்து, தமிழ்­நாடு தொழில் மேம்­பாட்டு நிறுவன அதி­கா­ரி­கள்கூறி­ய­தா­வது:சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டில் பங்­கேற்ற வங்­கி­கள், மின்­சாரம், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்­கள் உட்­பட, பல்­வேறு துறை­க­ளைச் சேர்ந்த, 50 நிறு­வ­னங்­கள் தமி­ழ­கத்­தில் தொழில் துவங்க முன் வந்­தன.இதில் புதுக்­கோட்­டை­யில், ஐ.டி.சி., நிறு­வ­னம்; பெரம்­ப­லுா­ரில், எம்.ஆர்.எப்.,; ஒர­க­டத்­தில், அப்­பல்லோ டயர்ஸ் என, 23 நிறு­வ­னங்­கள் தங்­க­ளது நிறு­வன கட்­டு­மா­னப் பணி­களை முடித்து, உற்­பத்தி பணி­களை துவக்­கி உள்­ளன.
மேலும், ஒன்­பது நிறு­வ­னங்­க­ளின் கட்­டு­மா­னப் பணி­கள் முடி­யும் நிலை­யில் உள்­ளன. மின்­சார உற்­பத்தி நிறு­வ­னங்­க­ளுக்கு, உற்­பத்­தியை துவக்க கால அவ­கா­சம் வழங்­கப்­பட்­டு உள்­ளது.‘மெகா, சூப்­பர், அல்ட்ரா’ என, மூன்று பிரி­வாக நிறு­வ­னங்­கள் வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இதில், மெகா நிறு­வ­னம்என்­றால், உற்­பத்தி துவங்க, மூன்று ஆண்­டு­களும்; சூப்பர் என்­றால், ஐந்து ஆண்­டு­களும்; அல்ட்ரா என்­றால், ஏழு ஆண்­டு­களும் அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளன. அதற்­குள், இந்த நிறுவனங்­கள் தங்­க­ளதுஉற்­பத்­தியை துவக்க வேண்­டும் என, ஒப்­பந்­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டு உள்ளது.

நடவடிக்கை

ஒவ்­வொரு நிறு­வ­னங் ­க­ளு­ட­னும், மாதந்­தோ­றும் ஆய்வு கூட்­டம் நடத்­தப்­பட்டு, பணி­கள் கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன.அவர்­க­ளுக்கு பிரச்­னை­கள் இருந்­தால், அவற்றை உட­ன­டி­யாக சரி செய்­ய­வும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது. 2019ம் ஆண்­டில் நடை­பெற உள்ள சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டில், அதிக முத­லீ­டு­களை ஈர்க்­கும் நோக்­கில் திட்­ட­மி­டப்­பட்டு வரு­கிறது.இவ்­வாறு அவர்­கள் கூறினர்.

– நமது நிரு­பர் –

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)