எஸ்.இ.இசட்., மறு ஆய்வு குழு அமைப்புஎஸ்.இ.இசட்., மறு ஆய்வு குழு அமைப்பு ... மத்திய வருவாய் துறை ஊழியர்களுக்கு குட்டு மத்திய வருவாய் துறை ஊழியர்களுக்கு குட்டு ...
உணவு பூங்கா திட்டம்: ராம்தேவ் – உ.பி., அரசு சமரசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2018
00:26

லக்னோ:உ.பி., முதல்­வர் யோகி ஆதி­த்ய­நாத் மேற்­கொண்ட சம­ரச முயற்­சி­யால், பாபா ராம்­தே­வின் பதஞ்­சலி நிறு­வ­னம், மெகா உணவு பூங்கா திட்­டத்தை, ரத்து செய்­யும் முடி­வில் இருந்து பின்­வாங்­கி­யுள்­ளது.
உத்­த­ர­கண்ட் மாநி­லம், ஹரித்­து­வா­ரைச் சேர்ந்த, பதஞ்­சலி ஆயுர்­வேத நிறுவனம், பல்­வேறு உணவு மற்­றும் ஆயுர்­வேத பொருட்­களை தயா­ரிக்­கிறது.இந்­நி­று­வ­னம், ‘பதஞ்­சலி புட் அண்டு ஹெர்­பல் பார்க்’ என்ற நிறு­வ­னம் மூலம், உத்­தர பிர­தே­சத்­தில், 6,000 கோடி ரூபாய் முத­லீட்­டில், மெகா உணவுப் பூங்கா அமைக்க திட்­ட­மிட்­டுள்­ளது.
யமுனா விரைவு சாலை அருகே, 425 ஏக்­க­ரில் அமை­யும் இந்த பூங்­கா­வில், ஆண்­டுக்கு, 25 ஆயி­ரம் கோடி ரூபாய்க்கு உண­வுப் பொருட்­கள் தயா­ரிக்­கப்­படும். இதன் மூலம், நேர­டி­யாக, 10 ஆயி­ரம் பேர் வேலை­வாய்ப்பு பெறு­வர் என, தெரி­விக்­கப்­ பட்­டுள்­ளது.இந்­நி­லை­யில், ‘‘உ.பி., அர­சின் ஒத்­து­ழைப்பு இல்­லா­த­தால், மெகா உணவு பூங்கா திட்­டத்தை ரத்து செய்ய முடிவு செய்­துள்­ளோம்,’’ என, பதஞ்­சலி ஆயுர்­வேத நிறு­வ­னத்­தின், நிர்­வாக இயக்­கு­னர் ஆச்­சார்ய பால­கி­ருஷ்ணா,திடீ­ரென அறி­வித்­தார்.

இதை­ய­டுத்து, உ.பி., தக­வல் தொடர்பு துறை முதன்மை செய­லர் அவனிஷ் அவஸ்தி, செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது:முதல்­வர் யோகி ஆதித்ய­நாத், ஆச்­சார்ய பால­கி­ருஷ்­ணாவை தொடர்பு கொண்டு, குறை­களை கேட்­ட­றிந்­தார். மெகா உணவு பூங்கா திட்­டம் ரத்து செய்­யப்­ப­ட­வில்லை. அதற்­கான நிலம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.ஏற்­க­னவே முடிவு செய்த­படி, திட்­டப் பணி­கள் துவங்­கும். இத்­திட்­டம் தொடர்­பாக, அரசு நடை­மு­றை­களை ஆராய்ந்து, ஆவண செய்­யு­மாறு,அதி­கா­ரி­க­ளுக்கு முதல்­வர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.இவ்­வாறு அவர் தெரிவித்­தார்.

இதை­ய­டுத்து, மெகா உணவு பூங்கா திட்­டத்தை கைவி­டும் முடி­வில் இருந்து, பதஞ்­சலி பின்­வாங்­கி­யுள்­ளது.பதஞ்­சலி நிறு­வ­னம், ஏற்­க­னவே மஹா­ராஷ்­டிரா மற்­றும் அசா­மில் மெகா உணவு பூங்கா திட்டங்­களில் முத­லீடு செய்­து உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)