பதிவு செய்த நாள்
07 ஜூன்2018
00:26
லக்னோ:உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்கொண்ட சமரச முயற்சியால், பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், மெகா உணவு பூங்கா திட்டத்தை, ரத்து செய்யும் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவாரைச் சேர்ந்த, பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், பல்வேறு உணவு மற்றும் ஆயுர்வேத பொருட்களை தயாரிக்கிறது.இந்நிறுவனம், ‘பதஞ்சலி புட் அண்டு ஹெர்பல் பார்க்’ என்ற நிறுவனம் மூலம், உத்தர பிரதேசத்தில், 6,000 கோடி ரூபாய் முதலீட்டில், மெகா உணவுப் பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளது.
யமுனா விரைவு சாலை அருகே, 425 ஏக்கரில் அமையும் இந்த பூங்காவில், ஆண்டுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படும். இதன் மூலம், நேரடியாக, 10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர் என, தெரிவிக்கப் பட்டுள்ளது.இந்நிலையில், ‘‘உ.பி., அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், மெகா உணவு பூங்கா திட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்,’’ என, பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின், நிர்வாக இயக்குனர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா,திடீரென அறிவித்தார்.
இதையடுத்து, உ.பி., தகவல் தொடர்பு துறை முதன்மை செயலர் அவனிஷ் அவஸ்தி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆச்சார்ய பாலகிருஷ்ணாவை தொடர்பு கொண்டு, குறைகளை கேட்டறிந்தார். மெகா உணவு பூங்கா திட்டம் ரத்து செய்யப்படவில்லை. அதற்கான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே முடிவு செய்தபடி, திட்டப் பணிகள் துவங்கும். இத்திட்டம் தொடர்பாக, அரசு நடைமுறைகளை ஆராய்ந்து, ஆவண செய்யுமாறு,அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, மெகா உணவு பூங்கா திட்டத்தை கைவிடும் முடிவில் இருந்து, பதஞ்சலி பின்வாங்கியுள்ளது.பதஞ்சலி நிறுவனம், ஏற்கனவே மஹாராஷ்டிரா மற்றும் அசாமில் மெகா உணவு பூங்கா திட்டங்களில் முதலீடு செய்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|