உணவு பூங்கா திட்டம்: ராம்தேவ் – உ.பி., அரசு சமரசம்உணவு பூங்கா திட்டம்: ராம்தேவ் – உ.பி., அரசு சமரசம் ... மத்திய வருவாய் துறை ஊழியர்களுக்கு குட்டு மத்திய வருவாய் துறை ஊழியர்களுக்கு குட்டு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘ரெப்போ’ வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி வீடு, வாகன கடன்களுக்கு வட்டி உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2018
00:29

மும்பை:ரிசர்வ் வங்கி, வங்­கி­க­ளுக்கு வழங்­கும் குறுகிய கால கட­னுக்­கான, ‘ரெப்போ’ வட்­டியை, 0.25 சத­வீ­தம் உயர்த்­தி­யுள்­ளது. இத­னால், வங்­கி­கள் வழங்­கும் வீடு, வாக­னம் உள்­ளிட்ட கடன்­க­ளுக்­கான வட்டி உய­ரும்.
நேற்று மும்­பை­யில், ரிசர்வ் வங்கி கவர்­னர் உர்­ஜித் படேல் தலை­மை­யிலான, நிதி கொள்கை குழு, மூன்­றா­வது நாளாக கூடி­யது.இக்­கூட்­டத்­தில், ரெப்போ வட்­டியை, 0.25 சத­வீ­தம் உயர்த்தி, 6.25 சத­வீ­த­மாக நிர்­ண­யிக்க, உர்­ஜித் படேல் மற்­றும் ஆறு உறுப்­பி­னர்­களும் ஏக மன­தாக ஆத­ரவுதெரி­வித்­த­னர்.

கடந்த, 2014, ஜன., 28ல் ரெப்போ வட்டி, 8 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்டது. அது முதல், படிப்­படி­யாக குறைந்து, 2017, ஆகஸ்­டில், 6 சத­வீ­த­மாக நிலை கொண்­டது. இந்­நிலை­யில், நான்கு ஆண்­டு ­க­ளுக்கு பின், தற்­போது, ரெப்போ வட்டி உயர்த்­தப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பாக, ரிசர்வ் வங்கி நேற்று வெளி­யிட்ட நிதிக் கொள்கை அறிக்கை:கடந்த சில காலாண்­டு­க­ளாக, நாட்­டின் பொரு­ளா­தா­ரம், ஸ்தி­ர­மாக எழுச்சி கண்டு வரு­கிறது. உற்­பத்­திக்­கும், தேவைக்­கும் உள்ள பற்­றாக்­குறை பெரும்­பா­லும் குறைந்­துள்­ளது; முத­லீட்டு நடவடிக்­கை­களும் அதி­க­ரித்­து உள்­ளன.

இவை­யெல்­லாம், பொரு­ளா­தா­ரம் மந்­த­நிலை­யில் இருந்து மீண்டு வரு­வதை தெரி­விப்­ப­தாக உள்­ளன. திவால் சட்­டத்­தின் கீழ், இடர்­பாட்டு கடன்­களை மீட்க எடுக்­கப்­பட்டு வரும் நட­வ­டிக்­கை­கள், வளர்ச்­சியை மேலும் ஊக்­கு­விக்­கும் வகை­யில் உள்­ளன.எனி­னும், சர்­வ­தேசஅரசி­யல் நில­வ­ரம், உலக நிதிச் சந்­தை­யில் காணப்­படும் ஏற்­றத்தாழ்வு, உள்­ நாட்டு நலன் என்ற பெயரில், சில நாடு­கள் எடுத்­துள்ள வர்த்­தக முடி­வு­கள், பொரு­ளா­தார மீட்­சியை மந்­தப்­படுத்­து­வ­தாக உள்­ளன.

இத்­த­கைய சூழ­லில், தனி­யார் துறை முத­லீ­டு­கள்முக்­கி­ய­மா­ன­வை­யாக உள்­ளன. மத்­திய – மாநில அரசு­க­ளின் பட்­ஜெட் இலக்­கு­கள், தற்­போது வரை, பண­வீக்க உயர்வை கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யி­லேயே உள்­ளன.எனி­னும், கச்சா எண்­ணெய் விலை குறித்த மதிப்­பீட்­டில் மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளது. ஏப்­ரல் அறிக்­கை­யில், ஒரு பேரல் கச்சா எண்­ணெய், 68 டால­ராக இருக்­கும் என, அனுமானிக்­கப்­பட்டது. அதற்கு மாறாக, 80 டாலரை தாண்­டி­யுள்­ளது.

இது, நாட்­டின் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை பெரு­க­வும், சில்­லரை பண­வீக்­கம் உய­ர­வும் வழி வகுத்­துள்­ளது.அத­னால், நடப்பு, 2018- – 19ம் நிதி­யாண்­டில், முதல் அரை­யாண்­டில், சில்­லரை பண­வீக்­கம், மறு மதிப்­பீடு செய்­யப்­பட்டு, 4.8 –- 4.9 சத­வீ­த­மாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. இது, இரண்­டா­வது அரை­யாண்­டில், 4.7 சத­வீ­த­மாக இருக்­கும்.இந்த மதிப்­பீட்­டின் அடிப்­ப­டை­யில், ரெப்போ வட்டி, 0.25 சத­வீ­தம் உயர்த்­தப்­பட்டு, 6.25 சத­வீ­த­மாக நிர்­ண­யிக்­கப்­படு­கிறது.

வங்­கி­க­ளி­டம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கட­னுக்­கான, ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி, 0.25 சத­வீ­தம் அதி­க­ரிக்­கப்­பட்டு, 6 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது.அதே­ச­ம­யம், நடப்பு நிதி­யாண்­டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 7.4 சத­வீ­த­மாக இருக்­கும் என்ற மதிப்­பீட்­டில் மாற்­றம் ஏதும் இல்லை.இவ்­வாறு அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

ரெப்போ வட்டி உயர்வு கார­ண­மாக, வங்­கி­கள் வீடு, வாக­னம் உள்­ளிட்ட பல்­வேறு கடன்­க­ளுக்­கான வட்டி உய­ரும். கடன்­தா­ரர்­க­ளின் மாத தவணை சுமை அதி­க­ரிக்­கும்.ஏற்­க­னவே, எஸ்.பி.ஐ., பஞ்­சாப் நேஷ­னல் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, யூனி­யன் பேங்க் ஆப் இந்­தியா உள்­ளிட்ட சில வங்­கி­கள், கட­னுக்­கான வட்­டியை உயர்த்­தி­யுள்­ளன. வீட்டு வசதி கடன் வழங்­கும், எச்.டி.எப்.சி.,யும், வட்­டியை உயர்த்­தி­யுள்­ளது.அடுத்து, மேலும் பல வங்­கி­கள் வட்­டியை உயர்த்­தும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள்

நகர்ப்­புற கூட்­டு­றவு வங்­கி­கள், ‘ஸ்மால் பைனான்ஸ் பேங்க்’ எனப்­படும் பட்­டி­ய­லில் சேர்க்­கப்­படும். இதன் மூலம், இவ்­வங்­கி­கள் சுதந்­தி­ர­மாக கிளை­களை விரி­வு­ப­டுத்தி, பர­வ­லான நிதிச் செயல்­பா­டு­களில் ஈடு­பட்டு, வர்த்­த­கத்தை மேம்­ப­டுத்­த­லாம்.
– ரிசர்வ் வங்கி அறிக்கை

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)