பதிவு செய்த நாள்
08 ஜூன்2018
01:17
மாநில அரசின் வருவாய் துறை ஊழியர்களை விட, மத்திய வருவாய் துறை ஊழியர்களின் செயல் திறன் குறைவாக இருப்பதாக, மத்திய நிதித் துறை செயலர், ஹஸ்முக் அதியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க்கில் உள்ள, மாநில அரசு ஊழியர்களுக்கும், மத்திய அரசு ஊழியர்களுக்கும் இடையேயான செயல்திறன் ஒப்பீடு அறிக்கை கிடைத்துள்ளது.
இதில், மே 26ம் தேதி வரை, வரி கணக்கு தாக்கலில், மாநில அரசு ஊழியர்களை விட, மத்திய அரசு ஊழியர்களின் செயல்திறன் குறைவாக உள்ளது தெரிகிறது. எனவே, மத்திய அரசு ஊழியர்களின் செயல்திறனை ஆய்வு செய்து, சிறப்பாக செயல்பட உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் உள்ளது.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|