பதிவு செய்த நாள்
08 ஜூன்2018
01:18
புதுடில்லி:சீனாவில் இருந்து இறக்குமதியாகும், ‘ஹை டென்சிட்டி பாலியஸ்டர் யார்ன்’ எனப்படும் அடர்த்திமிக்க பாலியஸ்டர் நுாலிழைக்கு, அதிக பொருள் குவிப்பு வரி விதிக்கப்பட உள்ளது.
குறைந்த விலையில் இறக்குமதியாகும், இந்த வகை நுாலிழையால், தங்கள் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படுவதாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்.ஆர்.எப்., நிறுவனங்கள் புகார் தெரிவித்திருந்தன. இதையடுத்து, டி.ஜி.ஏ.டி., அமைப்பு மேற்கொண்ட விசாரணையில், புகாருக்கு முகாந்திரம் உள்ளது தெரியவந்துள்ளது.
எனவே, ‘சீனாவில் இருந்து இறக்குமதியாகும், 1 டன் நுாலிழைக்கு, 174 – 528 டாலர் வரை, ஐந்து ஆண்டுகளுக்கு, அதிக பொருள் குவிப்பு வரி விதிக்கலாம்’ என, டி.ஜி.ஏ.டி., மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.எனினும், எவ்வளவு வரி விதிக்கலாம்; எத்தனை ஆண்டுகளுக்கு அதிக பொருள் குவிப்பு வரியை அமல்படுத்தலாம் என்பது தொடர்பாக, மத்திய நிதியமைச்சகம் தான் முடிவு செய்யும் என, அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|