பதிவு செய்த நாள்
08 ஜூன்2018
01:24
புதுடில்லி:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி – வீடியோகான் விவகாரத்தில் தொடர்புள்ள நிறுவனங்களிடம் விசாரணை நடத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார், வீடியோகான் நிறுவனத்திற்கு, 3,600 கோடி ரூபாய் கடன் வழங்கி, தன் கணவரின் நுபவர் ரினிவபிள்ஸ் நிறுவனத்திற்கு, 64 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றுத் தந்தார் என, குற்றச்சாட்டு உள்ளது.
இந்த விவகாரத்தில் சந்தா கோச்சாரின் பங்கு குறித்த விசாரணைக்கு, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இயக்குனர் குழு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புள்ள நிறுவனங்கள் மீதும், விதிமீறல், முறைகேடு, பரிவர்த்தனை மதிப்பை குறைத்து காட்டுதல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.இந்த புகார்கள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரிக்க, அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின், நுபவர் ரினிவபிள்ஸ், வீடியோகான் உள்ளிட்ட நிறுவனங்களின் பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்படும் எனத் தெரிகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|