பதிவு செய்த நாள்
08 ஜூன்2018
10:31
மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (ஜூன் 08) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளன. சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததாலும், வால் ஸ்டிரீட்டில் ஒரே இரவில் தள்ளாட்டம் ஏற்பட்டதை அடுத்து ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்பட்ட சரிவின் காரணமாகவும் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன.
மின்துறை, கட்டுமானம், எண்ணெய் மற்றும் எரிவாயு, வங்கித்துறை பங்குகள் அதிக அளவில் விற்கப்பட்டதால் சென்செக்ஸ் 137 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையும் பங்குச்சந்தைகளின் சரிவிற்கு காரணமாக கூறப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 137.10 புள்ளிகள் சரிந்து 35,325.98 புள்ளிகளாகவும், நிப்டி 50.65 புள்ளிகள் சரிந்து 10,717.70 புள்ளிகளாகவும் உள்ளன.
ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, யெஸ் வங்கி, ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி, எச்டிஎப்சி வங்கி, எச்டிஎப்சி லிமிடெட், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ, விப்ரோ, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 2.05 சதவீதம் வரை சரிவடைந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|