பதிவு செய்த நாள்
09 ஜூன்2018
00:12
புதுடில்லி:''தேசிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும்,'' என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்து உள்ளார்.அவர் மேலும் பேசியதாவது:கடந்த, 2017-–18ம் நிதியாண்டில், அன்னிய நேரடி முதலீடு, 6,196 கோடி டாலராக உயர்ந்துள்ளது.இது, முந்தைய நிதியாண்டில், 6,008 கோடி டாலராக இருந்தது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த நான்கு ஆண்டுகளில், 22,275 கோடி டாலர் மதிப்பிலான அன்னிய நேரடி முதலீடு குவிந்துள்ளது.தேசிய தொழில் கொள்கையை உருவாக்குவது தொடர்பாக, பல்வேறு தொழில்,வர்த்தக கூட்டமைப்புகளிடம் பேச்சு நடத்தப்பட்டது. இதையடுத்து உருவாக்கப்பட்டுள்ள, தேசிய தொழில் கொள்கை வரைவு அறிக்கை, அனைத்து அமைச்சகங்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அவை அளிக்கும் கருத்துகளின் அடிப்படையில், இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு, விரைவில் வெளியிடப்படும்.
இக்கொள்கை, இந்தியாவில், அன்னிய நேரடி முதலீடுகளை மேலும்அதிகரிக்க துணை புரியும்இவ்வாறு அவர்கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|