2.26 லட்சம் நிறுவனங்கள் மீது நடவடிக்கை   மீண்டும் போலிகள் களையெடுப்பு துவக்கம் 2.26 லட்சம் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மீண்டும் போலிகள் களையெடுப்பு ... ...  பெண்கள் தொழில் துவங்க உதவி ஐ.நா., – ‘நிடி ஆயோக்’ ஏற்பாடு பெண்கள் தொழில் துவங்க உதவி ஐ.நா., – ‘நிடி ஆயோக்’ ஏற்பாடு ...
8 கைவினை பொருட்களுக்கு, 'புவிசார் குறியீடு' தமிழக கைத்திறன் வளர்ச்சி கழகம் நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2018
00:16

கோவை:மாமல்லபுரம் சிற்பங்களை அடுத்து, தமிழகத்தின் எட்டு கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு கைத்திறன் வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்த சில தனித்தன்மை வாய்ந்த மிக தொன்மையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு, மத்திய அரசால் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தஞ்சாவூர் ஓவியத்துக்கு முதல் முறையாக, 2007ல் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
அடுத்து, நாகர்கோவில் நகைகள், தஞ்சாவூர் கலைத்தட்டு, சுவாமிமலை பஞ்சலோக சிற்பங்கள், தஞ்சாவூர் பொம்மைகள், நீலகிரி தோடர் பழங்குடி மக்களின் பூத்தையல் வேலைப்பாடு, பத்தமடை பாய்கள், நாச்சியார்கோவில் விளக்குகள் உள்ளிட்ட கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெறப்பட்டன.
கடந்த, 2017 நவம்பரில் மாமல்லபுரம் கற்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.நடப்பாண்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் தேர், விழுப்புரம் கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், திருச்சி அம்பாவூர் மரச்சிற்பம், தஞ்சாவூர் கருப்பூர் ஓவியங்கள், தஞ்சாவூர் ஒட்டும் கண்ணாடி வேலை, தஞ்சாவூர் - புதுக்கோட்டை நெட்டிவேலை ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு கோரப்பட்டுள்ளது.
மேலும், கன்னியாகுமரி - மயிலாடி கல் சிற்பங்கள், நாமக்கல் மாவட்டத்தின் மாக்கல் (முற்றாத கருங்கல்) உற்பத்தி பொருட்கள் உள்ளிட்ட, எட்டு கைத்திறன் வகைகள் புவிசார் குறியீடு பெற, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.இது தொடர்பான விண்ணப்பங்கள், மத்திய அரசின் புவிசார் குறியீட்டு பதிவக ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக கைத்திறன் வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)