பதிவு செய்த நாள்
09 ஜூன்2018
00:38
புதுடில்லி:கடந்த மே மாதம், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், பல்வேறு திட்டங்களின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பில், 66 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.இந்தியாவில், 42 நிறுவனங்கள், மியூச்சுவல் பண்டு திட்டங்களை நிர்வகித்து வருகின்றன. இத்திட்டங்களின் மொத்த மதிப்பு, ஏப்ரல் இறுதி நிலவரப்படி, 23.25 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.மே மாதம், இத்திட்டங்களின் சொத்து மதிப்பு, 66 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்து, 22.60 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.‘இன்கம், லிக்யுட்’ ஆகிய திட்டங்களில் இருந்து, அதிக அளவில் முதலீடுகள் வெளியேறியதே இதற்கு காரணம்.
முதலீட்டாளர்கள், லிக்யுட் பண்டு திட்டங்களில் இருந்து, 46 ஆயிரத்து, 724 கோடி ரூபாயை திரும்பப் பெற்றுள்ளனர். இன்கம் பண்டு திட்டங்களில் இருந்து, 20 ஆயிரம் கோடி ரூபாய் வெளியேறியுள்ளது.அதேசமயம், பங்குகளில் முதலீடு செய்யும் மியூச்சுவல் பண்டு திட்டங்களில், முதலீட்டாளர்கள், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளனர்.கடந்த மாதம், முதலீட்டாளர்கள், மியூச்சுவல் பண்டுகளில் இருந்து, நிகர அளவில், 50 ஆயிரம் கோடி ரூபாயை திரும்பப் பெற்றுள்ளனர். ஏப்ரலில், நிகர முதலீடு, 1.40 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|