பதிவு செய்த நாள்
09 ஜூன்2018
00:42
திருப்பூர்:சீன நிறுவனங்கள், இந்தியா உள்ளிட்ட எல்லையோர நாடுகளில், உற்பத்திகட்டமைப்புகளை நிறுவி, ஆடை வர்த்த கத்தை, வளைத்துவருகின்றன.
உலகளாவிய ஆடை வர்த்தக சந்தையில், 40 சதவீதத்திற்கும் மேலான வர்த்தகத்தை, சீனா தன் வசம் வைத்துள்ளது. நம் நாட்டு ஏற்றுமதிக்கு, சீன நிறுவனங்கள் மிகப்பெரிய போட்டியை ஏற்படுத்தி வருகின்றன.
வரியில்லா வர்த்தகம்
தொழில்நுட்ப உற்பத்தியில் கவனம் செலுத்தி வரும் சீனா, ஆயத்த ஆடை ஏற்றுமதியை படிப்படியாக குறைத்து வருகிறது.சீனாவுக்கு செல்ல வேண்டிய ஆர்டர்கள், நம் நாட்டை நோக்கி வரும் என, பின்னலாடை நகரான திருப்பூர் உட்பட ஜவுளி நகர தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர். ஆனால், சீன நிறுவனங்களோ வேறுவிதமான வியூகம் வகுத்து செயல்படுகின்றன.
பின்தங்கிய நாடுகளாக பட்டியலிடப்பட்டுள்ள வங்கதேசம், இலங்கை, வியட்னாம், கம்போடியா நாடுகளில், சீனாவைச் சேர்ந்த பல நிறுவனங்கள், ஆடை உற்பத்திகட்ட மைப்புகளை நிறுவி வருகின்றன.அமெரிக்கா, ஐரோப்பா என பல்வேறு நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உள்ளதால், இவை எல்லாவற்றையும் சீன நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றன.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர், ராஜா சண்முகம் கூறியதாவது:தங்கள் நாட்டில், உற்பத்தி செலவினம் அதிகரிப்பதால், ஜவுளி உற்பத்தியை சீனா குறைத்து வருகிறது. இதனால், சீனாவுக்கு செல்ல வேண்டிய, ‘ஆர்டர்’கள், நம் நாட்டை நோக்கி வரும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.
வங்கதேசம், வியட்னாம், கம்போடியா, இலங்கை போன்ற நாடுகளை, தங்களது ஆடை உற்பத்தி தளமாக மாற்றி வருகின்றன சீன நிறுவனங்கள். இதன் மூலம், ஏராளமான சிறப்பு சலுகைகள் சீன நிறுவனங்களுக்கு கிடைக்கின்றன.
மறைமுக தாக்குதல்
இதுவரை நேரடியாக போட்டியை ஏற்படுத்திய சீன நிறுவனங்கள், தற்போது, பிற நாடுகளில் இருந்து கொண்டு மறைமுக வர்த்தக தாக்குதல் நடத்துகின்றன.விலை குறைப்புக்கு உடன்படவில்லை என்றால், எல்லையோர நாடுகளில் செயல்படும் சீன நிறுவனங்களுக்கு, ‘ஆர்டர்’ கொடுத்து விடுகின்றனர்.வரி விலக்கை பயன்படுத்தி, வங்கதேசத்தில் இயங்கும் சீன நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளை, நம் சந்தையிலும் இறக்குமதி செய்கின்றன.
பல உள்நாட்டு, ‘பிராண்ட்’ நிறுவனங்கள் கூட, விலை குறைவாக கிடைப்பதால், சீன தயாரிப்புகளை கொள்முதல் செய்ய துவங்கியுள்ளன. சீனாவின், இந்த வர்த்தக தாக்குதலை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால், நம் ஆயத்த ஆடைத் துறை மிகப்பெரிய இழப்பை சந்திக்க வேண்டி வரும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|