பதிவு செய்த நாள்
11 ஜூன்2018
00:46
முதலீடு என்று வரும்போது, அவை தரக்கூடிய பலனை முக்கியமாக கருதுகிறோம். எல்லாரும் முதலீடு அதிக பலன் தர வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆனால், இது நடைமுறையில் செயலாக்கம் பெற வேண்டும் என்றால், சில முக்கியமான முதலீட்டு பாடங்களை மனதில் கொள்ள வேண்டும்
நீண்ட கால முதலீடு
முதலீடு செய்யும் நேரத்தைவிட, எவ்வளவு காலம் முதலீடு செய்கிறீர்கள் என்பது முக்கியமானது. அதாவது, நீண்ட காலமாக முதலீடு செய்தால் அதிக பலன் பெறலாம். அப்போது, கூட்டு வட்டி மற்றும் மறு முதலீட்டின் சாதகத்தை பெறலாம். எனவே, எவ்வளவு சீக்கிரம் சேமிப்பு மற்றும் முதலீட்டை துவக்க முடியுமோ அந்த அளவு நல்லது.
‘ரிஸ்க்’ அம்சம்
முதலீட்டில், ‘ரிஸ்க்’ என்பது முக்கிய அம்சமாக இருக்கிறது. எல்லா முதலீடுகளிலும் ரிஸ்க் உண்டு. அதிக பலன் தரும் முதலீடு என்றால் ரிஸ்க் அதிகமாக இருக்கும். ஆனால், அதிக ரிஸ்க் இருப்பதாலேயே முதலீடு அதிக பலன் தரும் என சொல்ல முடியாது. ரிஸ்க்கையும் கருத்தில் கொண்டு, முதலீட்டின் பலனை கணக்கிட்டு செயல்பட வேண்டும்.
முதலீட்டு வகை
ஒரே வகை முதலீட்டை நாடாமல், அது பரவலாக இருக்க வேண்டும். மேலும், முதலீட்டு வகைகளை தீர்மானிக்கும் போது, நீண்ட கால இலக்கிற்கு சம பங்கு சார்ந்த முதலீடு, மத்திய கால இலக்குகளுக்கு சம பங்கு மற்றும் கடன்சார் முதலீடு, உடனடி இலக்குகளுக்கு, ‘லிக்விடிட்டி’ அம்சம் கொண்ட முதலீட்டை நாட வேண்டாம்.
இலக்கு என்ன?
நீண்ட கால இலக்குகளுக்கு சம பங்கு சார்ந்த முதலீட்டை நாட வேண்டும் என்பதே முதலீட்டின் பொன் விதியாகச் சொல்லப்படுகிறது. ஓய்வூ கால சேமிப்பு, பிள்ளைகள் கல்வி ஆகியவை இதில் அடங்கும். சம பங்குகள் குறுகிய காலத்தில் ரிஸ்க் அதிகம் கொண்டவை என்றாலும், நீண்ட கால நோக்கில் நிலையான பலன் தர வல்லவை.
வரி விதிப்பு
எந்த ஒரு முதலீட்டிலும் வரி விதிப்பின் தாக்கத்தை மனதில் கொள்ளாமல் இருக்க முடியாது. உண்மையில் வரி விதிப்பிற்கு பிறகான பலனையே கருத்தில் கொள்ள வேண்டும். வைப்பு நிதி போன்ற முதலீடுகள் உத்தரவாத பலன் தந்தாலும், வரி விதிப்பை கழித்துவிட்டால், அவை தரும் பலன் மேலும் குறைந்துவிடும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|