பதிவு செய்த நாள்
13 ஜூன்2018
00:21
சத்தியமங்கலம்:முட்டைக்கோஸ் விலை, கடும் வீழ்ச்சியால், தாளவாடி விவசாயிகள் வேதனையடைந்தனர்.ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில், ௧௦௦க்கும் மேற்பட்ட கிராமங்களில், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நீலகிரி, சேன்டேஸ், கணேஸ் உள்ளிட்ட, பல்வேறு ரக முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் அறுவடை நடக்கிறது. கிலோ, 1 ரூபாய்க்கு விற்பதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து, தாளவாடி விவசாயிகள் கூறியதாவது:முட்டைக்கோஸ் மூன்று மாத பயிர். ஒரு ஏக்கருக்கு, 45 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. கடந்த ஆண்டு, 1 கிலோ, ஏழு ரூபாய் முதல், 10 ரூபாய் வரை விற்றது; லாபமும் கிடைத்தது. தற்போது இரண்டு மடங்கு விளைச்சலால், வியாபாரிகள் கிலோ, ஒரு ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர். இதனால் அசல் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|