எண்ணிப் பாருங்க... எண்ணிப் பாருங்க... ... நாட்டின் தொழில் துறை உற்பத்தி ஏப்ரலில் 4.9 சதவீதமாக வளர்ச்சி நாட்டின் தொழில் துறை உற்பத்தி ஏப்ரலில் 4.9 சதவீதமாக வளர்ச்சி ...
நாட்டின் சில்லரை பணவீக்கம் நான்கு மாதங்கள் காணாத உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2018
00:23

புதுடில்லி:காய்­க­றி­கள், உண­வுப் பொருட்­கள் விலை உயர்­வால், மே மாதம், சில்­லரை பண­வீக்­கம், 4.87 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. இது, ஏப்­ர­லில், 4.58 சத­வீ­த­மாக இருந்­தது.கடந்த ஆண்டு, ஏப்­ர­லில், சில்­லரை பண­வீக்­கம், 2.18 சத­வீ­த­மாக குறைந்து காணப்­பட்­டது.சில்­லரை பண­வீக்­கம், மார்ச்­சில், 4.28 சத­வீ­தம்; பிப்­ர­வ­ரி­யில், 4.44 சத­வீ­தம்; ஜன­வ­ரி­யில், 5.07 சத­வீ­தம் என்ற அள­வில் உயர்ந்­தி­ருந்­தது.
காய்­க­றி­கள், பழங்­கள், உண­வுப் பொருட்­கள் விலை உயர்­வால், சில்­லரை பண­வீக்­கம் அதி­க­ரித்­துள்­ளது. மே மாதத்­தில், உண­வுப் பொருட்­கள் பண­வீக்­கம், 3.10 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. இது, ஏப்­ர­லில், 2.80 சத­வீ­த­மாக இருந்­தது. கடந்த ஆண்டு மே மாதம், உண­வுப் பொருட்­கள் பண­வீக்­கம், 1.05 சத­வீ­தம் என்ற அள­வில், பின்­ன­டைவை கண்­டி­ருந்­தது.ரிசர்வ் வங்கி, பண­வீக்­கத்தை, 4 சத­வீ­தத்­திற்­குள் வைத்­தி­ருக்க இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது. எனி­னும், கச்சா எண்­ணெய் விலை உயர்­வால், ஏழு மாதங்­க­ளாக இந்த இலக்கை மீறி பண­வீக்­கம் உயர்ந்து வரு­கிறது.பண­வீக்­கத்தை கட்­டுப்­ப­டுத்த, ரிசர்வ் வங்கி, கடந்த வாரம், வங்­கி­க­ளுக்கு வழங்­கும் குறு­கிய கால கடன்­க­ளுக்­கான, ‘ரெப்போ’ விகி­தத்தை, 6.25 சத­வீ­த­மாக உயர்த்­தி­யது. இது, கடந்த நான்கு ஆண்­டு­க­ளுக்கு பின் மேற்­கொள்­ளப்­பட்ட உயர்­வா­கும்.நடப்பு, 2018- – 19ம் நிதி­யாண்­டில், முதல் அரை­யாண்­டில், சில்­லரை பண­வீக்­கம், மறு­ம­திப்­பீடு செய்­யப்­பட்டு, 4.8 -– 4.9 சத­வீ­த­மாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. இது, இரண்­டா­வது அரை­யாண்­டில், 4.7 சத­வீ­த­மாக இருக்­கும் என, ரிசர்வ் வங்கி தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)