பதிவு செய்த நாள்
13 ஜூன்2018
00:23
புதுடில்லி:காய்கறிகள், உணவுப் பொருட்கள் விலை உயர்வால், மே மாதம், சில்லரை பணவீக்கம், 4.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, ஏப்ரலில், 4.58 சதவீதமாக இருந்தது.கடந்த ஆண்டு, ஏப்ரலில், சில்லரை பணவீக்கம், 2.18 சதவீதமாக குறைந்து காணப்பட்டது.சில்லரை பணவீக்கம், மார்ச்சில், 4.28 சதவீதம்; பிப்ரவரியில், 4.44 சதவீதம்; ஜனவரியில், 5.07 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது.
காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள் விலை உயர்வால், சில்லரை பணவீக்கம் அதிகரித்துள்ளது. மே மாதத்தில், உணவுப் பொருட்கள் பணவீக்கம், 3.10 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, ஏப்ரலில், 2.80 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு மே மாதம், உணவுப் பொருட்கள் பணவீக்கம், 1.05 சதவீதம் என்ற அளவில், பின்னடைவை கண்டிருந்தது.ரிசர்வ் வங்கி, பணவீக்கத்தை, 4 சதவீதத்திற்குள் வைத்திருக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. எனினும், கச்சா எண்ணெய் விலை உயர்வால், ஏழு மாதங்களாக இந்த இலக்கை மீறி பணவீக்கம் உயர்ந்து வருகிறது.பணவீக்கத்தை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி, கடந்த வாரம், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான, ‘ரெப்போ’ விகிதத்தை, 6.25 சதவீதமாக உயர்த்தியது. இது, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பின் மேற்கொள்ளப்பட்ட உயர்வாகும்.நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், முதல் அரையாண்டில், சில்லரை பணவீக்கம், மறுமதிப்பீடு செய்யப்பட்டு, 4.8 -– 4.9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, இரண்டாவது அரையாண்டில், 4.7 சதவீதமாக இருக்கும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|