பதிவு செய்த நாள்
13 ஜூன்2018
00:26
புதுடில்லி:இந்திய ரயில்வேக்கு ஆலோசனை வழங்கும், ‘ரைட்ஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 20ல் துவங்கி, 22ல் முடிவடைகிறது.பங்கு ஒன்றின் விலை, 180 –- 185 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தில், மத்திய அரசின் பங்கு மூலதனம், 100 சதவீதம் உள்ளது. அதில், 12 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 460 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் விற்பனைக்கு வரும், 2.52 கோடி பங்குகளில், ‘ரைட்ஸ்’ நிறுவன ஊழியர்களுக்கு, 12 லட்சம் பங்குகள் ஒதுக்கப்பட உள்ளன.நடப்பு நிதியாண்டில், பங்கு வெளியீட்டில் களமிறங்கும் முதல் பொதுத் துறை நிறுவனம், ரைட்ஸ் ஆகும்.இந்த வெளியீட்டை தொடர்ந்து, ரயில்வேயின், அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளும், ஆர்.வி.என்.எல்., நிறுவனமும், பங்கு வெளியீட்டிற்கு வர உள்ளது. இந்நிறுவனத்தில், 10 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 500 கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இவை தவிர, ரயில்வேயின், ஐ.ஆர்.எப்.சி., இர்கான் ஆகிய நிறுவனங்களும், இந்தாண்டில் பங்கு வெளியீட்டில் இறங்க உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|