பதிவு செய்த நாள்
14 ஜூன்2018
00:25
சேலம்:தமிழகம், கர்நாடகா, கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும், தென் மேற்கு பருவமழையால், தமிழக மார்க்கெட்டுகளுக்கு இஞ்சி வரத்து குறைந்துள்ளது. இதனால், இஞ்சி விலை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல்; கர்நாடகாவில் மைசூரு, ஹசன்; கேரளாவில் தேக்கடி, ஆலப்புழா ஆகிய இடங்களில் அதிக அளவில் இஞ்சி பயிரிடப்படுகிறது.தற்போது, தென் மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து, தொடர்ந்து பெய்யும் மழையால், இஞ்சி அறுவடை பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால், தமிழகத்தின் பெரிய மார்க்கெட்டுகளான, சென்னை – கோயம்பேடு, மதுரை – மாட்டுத்தாவணி, திண்டுக்கல் – ஒட்டன்சத்திரம், சேலம் – தலைவாசல், நாகர்கோவில் – வடசேரி மார்க்கெட்டுகளுக்கு வரத்து குறைந்துள்ளது.
கடந்த மாதம் வரை, தினசரி, 250 லாரிகளில் விற்பனைக்கு வந்த இஞ்சி, தற்போது, 100 லாரிகளாகக் குறைந்துள்ளது.வரத்து சரிவால், இஞ்சி விலை, கிலோவுக்கு, 20 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த மாதம், உழவர் சந்தைகளில், இஞ்சி கிலோ, 45 முதல், 70 ரூபாய் வரை விற்பனையானது; தற்போது, 90 ரூபாய்க்கு விற்பனையாகிறது. காய்கறி மார்க்கெட்டுகளில், கிலோ, 60 முதல், 80 ரூபாய் வரை விற்றது, நேற்று கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|