பதிவு செய்த நாள்
14 ஜூன்2018
00:29
புதுடில்லி:‘மத்திய அரசு துறைகள், மாநாடு, கருத்தரங்கு ஆகியவற்றுக்கான செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்’ என, மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து, அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:மத்திய அரசு துறைகள், சுயாட்சி அமைப்புகள் ஆகியவை, உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் நடத்தும் மாநாடுகள், கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள் ஆகியவற்றுக்கான செலவினங்கள், 40 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருந்தால், மத்திய நிதியமைச்சகத்திடம் அனுமதி பெறவேண்டும்.
செலவினங்கள், 40 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருந்தால், மத்திய செலவினங்கள் துறை பரிந்துரைக்க வேண்டும். அனைத்து துறைகளும், பயணம், தங்குமிடம் ஆகியவற்றுக்கு மிகக் குறைவாக செலவிட்டு, சிக்கனமாக நிகழ்ச்சிகளை நடத்துவது அவசியம்.வெளிநாடுகளில், ‘பிராண்டு இந்தியா’ திட்டம் மற்றும் வர்த்தக மேம்பாடு தொடர்பான கருத்தரங்குகள், கண்காட்சிகள், மாநாடுகள் ஆகியவற்றை தவிர்த்து, பிறவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட மாட்டாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|