பதிவு செய்த நாள்
14 ஜூன்2018
00:30
புதுடில்லி:வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான, ‘கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன்’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, ‘செபி’யிடம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.
இந்நிறுவனம், 43 லட்சத்து, 83 ஆயிரத்து, 320 புதிய பங்குகளை வெளியிட்டு, 400 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில், இந்நிறுவன இயக்குனர்களின் பங்குகளும் அடக்கம். பங்கு வெளியீட்டின் மூலமாக திரட்டும் தொகையைக் கொண்டு கடன்களின் ஒரு பகுதியையோ அல்லது முழுமையாகவோ அடைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிறுவனத்தில், ‘இண்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன்’ நிறுவனம், 14.06 சதவீத பங்குகளையும், ‘மரினா’ நிறுவனம், 15.50 சதவீத பங்குகளையும் வைத்துள்ளன.
ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள், தகுதி வாய்ந்த ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட உள்ளன.இந்த பங்கு வெளியீட்டு பணிகளை, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ், ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ், எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்ள உள்ளன.நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கோவையில் உள்ளது. இந்நிறுவனத்துக்கு புனே, பிதாம்பூர், ஜாம்ஷெட்பூர், பெங்களூரு, ஸ்ரீபெரும்புதுார், சென்னை ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|