மத்திய அரசு சிக்கன நடவடிக்கை கருத்தரங்கு செலவிற்கு கட்டுப்பாடு மத்திய அரசு சிக்கன நடவடிக்கை கருத்தரங்கு செலவிற்கு கட்டுப்பாடு ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.57 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.57 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பணவீக்க உயர்வால், ‘ரெப்போ’ மேலும் உயர வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2018
00:32

மும்பை:நாட்­டின் சில்­லரை பண­வீக்­கம் உயர்ந்­துள்­ள­தால், ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்­டியை மேலும் உயர்த்த வாய்ப்பு உள்­ள­தாக, நிதித் துறை­யி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.
ரிசர்வ் வங்கி, நடப்பு நிதி­யாண்­டின் இரண்­டா­வது நிதிக் கொள்கை அறிக்­கையை, 6ம் தேதி வெளி­யிட்­டது. அதில், ரிசர்வ் வங்கி, சில்­லரை பண­வீக்க மதிப்­பீட்டை, 0.30 சத­வீ­தம் உயர்த்­தி­ இருந்­தது. மேலும், பண­வீக்­கத்தை கட்­டுப்­ப­டுத்த, வங்­கி­க­ளுக்கு வழங்­கும் குறு­கிய கால கட­னுக்­கான ரெப்போ வட்டி, 0.25 சத­வீ­தம் உயர்த்­தப்­பட்டு, 6.25 சத­வீ­த­மாக நிர்­ண­யித்­துள்­ள­தாக, அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு இருந்­தது.
இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம், மே மாத சில்­லரை பண­வீக்க புள்­ளி­வி­ப­ரம் வெளி­யா­னது. அதில், நான்கு மாதங்­களில் இல்­லாத வகை­யில் சில்­லரை பண­வீக்­கம், 4.87 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ள­தாக, மத்­திய புள்­ளி­யி­யல் துறை­யின் அறிக்கை தெரி­வித்­தது.இத­னால், ‘ஆக., 1ல், ரிசர்வ் வங்கி வெளி­யிட உள்ள, நிதிக் கொள்கை அறிக்­கை­யில், ரெப்போ வட்டி மீண்­டும், 0.25 சத­வீ­தம் உயர்த்­தப்ப­ட­லாம்’ என, பி.என்.பி., பரி­பாஸ் நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.
‘தற்­போ­தைய நிலை­யி­லேயே கச்சா எண்­ணெய் விலை நீடிக்­கும்­பட்­சத்­தில், சில்­லரை பண­வீக்­கம் மேலும் உயர்ந்­தால், ரெப்போ வட்டி மீண்­டும் உயர்த்­தப்­ப­ட­லாம். ‘இதில், மத்­திய அரசு உயர்த்­தி­யுள்ள, வேளாண் பொருட்­க­ளுக்­கான குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை­யின் தாக்­கத்­தை­யும் கணக்­கில் கொள்ள வேண்­டும்’ என, யு.பி.எஸ்., செக்­யூ­ரிட்­டிஸ் நிறு­வ­னம் கூறி­யுள்­ளது.‘பண­வீக்க உயர்­வின் சமிக்­ஞை­யால், நிதிப் புழக்­கத்தை கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில், ரெப்போ வட்டி உயர்த்­தப்­ப­ட­லாம்’ என, டாய்ச்சி வங்கி தெரி­வித்­துள்­ளது.இந்த கருத்­து­க­ளுக்கு மாறாக, ‘ரெப்போ வட்­டி­யில் மாற்­றம் இருக்­காது’ என, பேங்க் ஆப் அமெ­ரிக்கா மெரில் லிஞ்ச் தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)