மத்திய அரசு சிக்கன நடவடிக்கை கருத்தரங்கு செலவிற்கு கட்டுப்பாடு மத்திய அரசு சிக்கன நடவடிக்கை கருத்தரங்கு செலவிற்கு கட்டுப்பாடு ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.57 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.57 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘வாரா கடன் வங்கி’ திட்டத்திற்கு சி.ஐ.ஐ., வரவேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2018
00:35

மும்பை:மத்­திய அர­சின், ‘வாராக் கடன் வங்கி’ திட்­டத்தை, இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்­பான, சி.ஐ.ஐ., வர­வேற்­றுள்­ளது.மத்­திய நிதி­ய­மைச்­சர் பொறுப்­பில், தற்­கா­லி­க­மாக உள்ள பியுஷ் கோயல், சமீ­பத்­தில், வங்­கி­க­ளின் வாராக் கடன் பிரச்­னைக்கு இரண்டு யோச­னை­களை தெரி­வித்­தி­ருந்­தார்.முத­லா­வ­தாக, மத்­திய அரசு, ஏ.ஆர்.சி., எனப்­படும் சொத்து மறு­சீ­ர­மைப்பு நிறு­வ­னத்தை துவக்கி, பொதுத் துறை வங்­கி­க­ளின் வாராக் கடனை, குறிப்­பிட்ட சத­வீத தள்­ளு­ப­டி­யில் வாங்­கிக் கொள்­ள­லாம். இரண்­டா­வ­தாக, பொதுத் துறை வங்­கி­க­ளின் வாராக் கடனை மட்­டும் நிர்­வ­கிக்க, மத்­திய அரசு, ஏ.எம்.சி., எனப்­படும் சொத்து நிர்­வாக நிறு­வ­னத்தை துவக்­க­லாம் என, அவர் கூறி­யி­ருந்­தார்.இந்த இரண்டு யோச­னை­களில் ஒன்­றின் கீழ், வாராக் கடன் வங்கி அமைத்து, பொதுத் துறை வங்­கி­க­ளின் வாராக் கடன்­கள் அனைத்­தை­யும் மாற்றி விட்­டால், வங்­கி­க­ளின் நிதி நிலை அறிக்கை சுத்­த­மாகி விடும்.
அத்­து­டன், டிபா­சிட்திரட்­டு­தல், கடன் வழங்­கு­தல் உள்­ளிட்ட பிர­தான சேவை­களில் மட்­டுமே வங்­கி­கள் கவ­னம் செலுத்த வழி ஏற்­படும்.சமீ­பத்­தில், ரிசர்வ் வங்கி அறி­மு­கப்­ப­டுத்­திய கடு­மை­யான நெறி­மு­றை­களும், கடன் வழங்­கு­வ­தில் ஒழுங்­கு­மு­றையை ஏற்­ப­டுத்தி, வங்­கி­கள், வாராக் கடன்­களை ஒரு வரை­ய­றைக்­குள் வைக்க உத­வும்.
இது தவிர, திவால் சட்­டத்­தின் கீழ் தற்­போது வாராக் கடன்­கள் விரைந்து பைச­லாகி வரு­வ­தும், வங்­கித் துறை வளர்ச்­சிக்கு துணை புரி­யும் என, மத்­திய அரசு கரு­து­கிறது.அத­னால், பியுஷ் கோயல், தன் யோச­னை­களை பரி­சீ­லிக்க, பஞ்­சாப் நேஷ­னல் வங்கி தலை­வர், சுனில் மேத்தா தலை­மை­யில், குழு ஒன்றை அமைத்­துள்­ளார்.
இக்­குழு, வாராக் கடன் வங்கி அமைப்­பது குறித்து ஆராய்ந்து, அதன் பரிந்­து­ரையை மத்­திய அர­சுக்கு விரை­வில் வழங்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இது குறித்து, சி.ஐ.ஐ., தலை­வர் பார்தி மிட்­டல் கூறி­ய­தா­வது:வங்­கி­க­ளின் வாராக் கடன் பிரச்­னைக்கு தீர்வு காண்­பது அவ­சி­யம். கடந்த கால தவ­று­கள், எதிர்­கா­லத்­தில் ஏற்­ப­டக் கூடாது.
வங்கி நிதி நிலை அறிக்­கை­யில், வாராக் கடன் இல்­லாத நிலை உரு­வாக வேண்­டும். அதற்கு, வாராக் கடன் வங்கி உத­வும் என, நம்­பு­கி­றேன். இந்த திட்­டத்தை, சி.ஐ.ஐ., வர­வேற்­கிறது. இதன் மூலம், வங்­கி­க­ளின் கடன் வளர்ச்­சி­யில் ஏற்­பட்­டுள்ள சுணக்க நிலை மாறும்.இவ்­வாறு அவர் கூறி­னார்
வாராக் கடன் வங்­கிக்கு, அமெ­ரிக்­கா­வின் பேங்க் ஆப் அமெ­ரிக்கா மெரில் லிஞ்ச் வங்­கி­யும் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளது.
பொறுத்திருந்து பார்ப்போம்
பொதுத் துறை வங்­கி­க­ளின் முத­லா­ளி­யாக மத்­திய அரசு உள்­ளது. இவ்­வங்­கி­க­ளின் வாராக் கடன், 10 லட்­சம் கோடி ரூபாயை தாண்­டி­யுள்­ளது. இப்­பி­ரச்­னைக்கு தீர்வு காண, மத்­திய அரசு நுாதன­மாக யோசித்­துள்­ளது. வாராக் கடன் வங்கி என்ற புதிய திட்­டத்­தின் சாதக, பாதக அம்­சங்­கள் குறித்து ஆராய, சிறப்பு குழுவை அமைத்­துள்­ளது. இக்­கு­ழு­வின் அறிக்கை, இரு வாரங்­களில் வெளி­யா­கும் என, தெரி­கிறது. அது­வரை, கருத்து தெரி­விக்க விரும்­ப­வில்லை; பொறுத்­தி­ருந்து பார்ப்­போம்.
உதய் கோட்டக் செயல் துணை தலைவர், கோட்டக் மகிந்திரா வங்கி, (பார்தி மிட்டலை தொடர்ந்து, சி.ஐ.ஐ., தலைவராக பொறுப்பேற்க உள்ளவர்)

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)