பதிவு செய்த நாள்
14 ஜூன்2018
10:29
மும்பை : கடந்த 3 நாட்களாக ஏற்றத்துடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள் இன்று (ஜூன் 14) சரிவுடன் துவங்கி உள்ளன. ஐடி, பொதுத்துறை வங்கிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, வங்கிகள் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் வெவாக சரிவடைந்துள்ளன.
இதன் காரணமாக இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 126.09 புள்ளிகள் சரிந்து 35,613.07 புள்ளிகளாகவும், நிப்டி 35.95 புள்ளிகள் சரிந்து 10,820.75 புள்ளிகளாகவும் உள்ளன. விப்ரோ, ஆக்சிஸ் வங்கி, டிசிஎஸ், என்டிபிசி, எஸ்பிஐ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, அதானி போர்ட்ஸ், கோல் இந்தியா, கோடாக் வங்கி, ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1.08 சரிவீதம் வரை சரிவடைந்துள்ளது.
ஆசிய நாடுகளில் ஹாங்காங், ஜப்பான், ஷங்காய் பங்குச்சந்தைகளும் சரிவுடனேயே காணப்படுகின்றன. அமெரிக்க பங்குச்சந்தைகளும் நேற்று சரிவுடுனேயே நிறைவடைந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|