பதிவு செய்த நாள்
14 ஜூன்2018
16:06
புதுடில்லி : மே மாதத்தில் நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் 4.43 சதவீதம் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக 14 மாதங்களுக்கு பிறகு மொத்த விலை பணவீக்கம் உயர்ந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் 3.18 சதவீதம் உயர்ந்த மொத்தவிலை பணவீக்கம், மே மாதத்தில் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 2.26 சதவீதமாக மட்டுமே இருந்தது. மொத்த விலை பணவீக்கம் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின்படி, மே மாதத்தில் உணவு பொருட்களின் விலை 1.60 சதவீதமாக உள்ளது. கடந்த மாதம் உணவு பொருட்களின் விலை அடிப்படையிலான பணவீக்கம் 0.87 சதவீதமாக இருந்தது.
எரிபொருட்கள் மற்றும் மின்சார அடிப்படையிலான பணவீக்கம் 11.222 சதவீதமும், காய்கறிகளின் பணவீக்கம் 2.51 சதவீதமும், பழங்களின் விலை 15.40 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதனால் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அசோசம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|