பதிவு செய்த நாள்
15 ஜூன்2018
00:48
டெட்ராய்ட்:ஜி.எம்., என, சுருக்கமாக அழைக்கப்படும், அமெரிக்காவின், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக, சென்னையைச் சேர்ந்த, திவ்யா சூர்யதேவரா நியமிக்கப்பட்டுள்ளார்.அவர், செப்.,1ல் இப்பொறுப்பை ஏற்பார்.
சென்னை பல்கலையில், வணிகவியலில் முதுகலை பட்டம் பெற்ற, திவ்யா சூர்யதேவரா, அமெரிக்காவின், ஹார்வர்டு பல்கலையில், எம்.பி.ஏ., முடித்து, யு.பி.எஸ்., மற்றும், பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனங்களில், நிதி ஆய்வாளராக பணியாற்றினார். கடந்த,2005ல், தன், 25வது வயதில், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து, 2017, ஜூலையில், கார்ப்பரேட் நிதிப் பிரிவின் துணைத் தலைவராக பொறுப்பேற்றார்.
தற்போது, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவராக, மேரி பாரா உள்ளார்.உலக அளவில், வாகன துறையில், வேறு எந்த நிறுவனத்திலும், முதல் இரண்டு உயர் பொறுப்புகளில், பெண்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.அமெரிக்க பங்குச் சந்தை பட்டியலில் உள்ள, ஹெர்ஷே, அமெரிக்கன் வாட்டர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களில், தலைமை செயல் அதிகாரி, தலைமை நிதி அதிகாரி பொறுப்புகளில் பெண்கள் உள்ளனர். வாகன துறையில் இந்த பெருமையை, ஜி.எம்., பெற உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|