பதிவு செய்த நாள்
15 ஜூன்2018
16:02
மும்பை : காலையில் ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள், பிற்பகல் வர்த்தகத்தின் போது ஊசலாட்டத்துடன் காணப்பட்டன. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் உயர்வுடன் காணப்பட்ட போதிலும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 121 புள்ளிகள் வரை சரிவடைந்தன.
இன்றைய வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 22.32 புள்ளிகள் உயர்ந்து 35,622.14 புள்ளிகளாக உள்ளது. இன்போசிஸ் நிறுவன பங்குகள் 4 சதவீதமும், டிசிஎஸ் நிறுவன பங்குகள் 3 சதவீதமும், பஜாஜ் பைனான்ஸ், எச்சிஎல், யுபிஎல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1 முதல் 4 சதவீதம் வரை உயர்ந்தன. அதே சமயம், ஐசிஐசிஐ வங்கி, ஹிண்டல்கோ இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, யெஸ் வங்கி பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.
நிப்டி 121 புள்ளிகள் சரிந்து 10,800 புள்ளிகளில் நிலை கொண்டது. இதனால் கர்நாடகா வங்கி, அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, யூனியன் வங்கி, யூசிஓ வங்கி, எஸ்பிஐ லைப், டாடா குளோபல், அசோக் லேலாண்ட் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 4 சதவீதம் வரை சரிவடைந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|