பதிவு செய்த நாள்
16 ஜூன்2018
00:41
புதுடில்லி:ஈரானில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கான தற்போதைய பணப் பட்டுவாடா நடைமுறை, அக்., இறுதியுடன் நிறுத்தப்பட உள்ளது.
பொதுத் துறையைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள், ஈரானில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு, ஜெர்மனியின் ‘இ.ஐ.எச்.,’ வங்கி மூலம், யூரோ கரன்சியில் செலுத்துகின்றன.இந்நிலையில், அமெரிக்கா, ஈரான் உடனான அணுஆயுத தடை ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதுடன், 180 நாட்களுக்குள் பொருளாதார தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
அதனால், ‘நவ.,3 முதல், ஈரானுக்கு, யூரோவில் பணம் செலுத்த முடியாது’ என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு அறிக்கை அனுப்பி உள்ளது.இது குறித்து, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் நிதித் துறை இயக்குனர் ராமச்சந்திரன் கூறியதாவது:கச்சா எண்ணெய் ஏற்றுமதி தொகையை, ரூபாயில் பெறுவதா அல்லது பழைய நடைமுறைப்படி கடனுக்கு அளிப்பதா என்பதை ஈரான் தான் முடிவு செய்ய வேண்டும்.பொருளாதார தடையால், நமக்கு எந்த பாதிப்பும் இல்லை. ரஷ்யா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ள முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|