பதிவு செய்த நாள்
18 ஜூன்2018
06:52
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு அண்மை காலத்தில் குறைந்தாலும், சுற்றுலா பயணிகள் தங்கள் பயண திட்டத்தில் உறுதியாக இருப்பது தெரிய வந்துள்ளது.
பயண ஏற்பாட்டு இணையதளமான யாத்ரா.காம் நடத்திய ஆய்வில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்ட விபரம் வருமாறு: டாலரின் மதிப்பு உயர்வால் 52 சதவீத பங்கேற்பாளர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயண திட்டத்தை மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனினும், 48 சதவிதத்தினர் எப்படியும் திட்டமிட்டபடி சுற்றுலா செல்வோம் என்று தெரிவித்தனர். பங்கேற்பாளர்களின் 72 சதவீதத்தினர் பயண காலத்தை குறைத்துக்கொள்ள மாட்டோம் என்று கூறினார். 51 சதவீதத்தினர் ஷாப்பிங் பட்ஜெட்டை குறைத்துக்கொள்வோம் என்றும்; 32 சதவீதத்தினர் மட்டுமே வெளிநாட்டு பயணத்திற்கு பதில் உள்நாட்டு பயணத்தை நாடுவோம் எனவும் கூறினர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|