பதிவு செய்த நாள்
18 ஜூன்2018
06:52
அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு ஏற்ற முதலீட்டு வாய்ப்பாக நிரந்தர வைப்பு நிதி மற்றும் தொடர் வைப்பு முதலீடுகள் அமைகின்றன.
பணத்தை வங்கி சேமிப்பு கணக்கில் போட்டு முடக்கி வைப்பது அல்லது சேமிப்புக்கு மிச்சமில்லாமல் செலவிடுவதை விட வைப்பு நிதிகளில் முதலீடு செய்வது ஏற்றது. நிரந்தர வைப்பு நிதி மற்றும் தொடர் வைப்பு நிதி (ஆர்.டி) ஆகிய இரண்டுமே ஏறக்குறைய ஒரே மாதிரியான அம்சங்கள் மற்றும் பலன்களை கொண்டு இருந்தாலும், அவற்றில் சில வேறுபாடுகளும் உள்ளன. இரண்டிலுமே சாதகங்களும், பாதகங்களும் உண்டு.
வைப்பு நிதி எனும் போது, மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். தொடர் வைப்பு நிதியில், மாதாமாதம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து வரலாம். இது சீரான சேமிப்பாகவும் அமையும். வைப்பு நிதியில் குறைந்த பட்சம் ஏழு நாட்கள் முதல் அதிகபட்சம், 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். இடைப்பட்ட காலத்தில் அவசரத் தேவை எனில், வைப்பு நிதி மீது கடன் பெறலாம்.
வைப்பு நிதி முதலீட்டில் வரம்பு இல்லை. தொடர் வைப்பு நிதியிலும் வரம்பு இல்லை என்றாலும் பொதுவாக வங்கிகள் குறைந்தபட்ச தொகையாக, 1,000 ரூபாய் கொண்டிருக்கலாம். கையில் மொத்தமாக பணம் வைத்திருந்தால் வைப்பு நிதியை நாடலாம். அதே நேரத்தில் மாத ஊதியம் பெறுபவர்களுக்கு தொடர் வைப்பு நிதி ஏற்றதாக இருக்கும். அவர்களால் திட்டமிட்டு மாதம் ஒரு தொகையை ஒதுக்க முடியும். ஆனால், மொத்தமாக பார்க்கும் போது வைப்பு நிதியை விட தொடர் வைப்பு நிதிக்கான வட்டி வருமானம் கொஞ்சம் குறைவாக இருக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|