பதிவு செய்த நாள்
20 ஜூன்2018
00:25
பெங்களூரு : ‘கூகுள்’ நிறுவனம், செய்தியின் நம்பகத்தன்மையை ஆராய்ந்து அறியும் பயிற்சியை, 8,000 பத்திரிகையாளர்களுக்கு வழங்க உள்ளது.
இது குறித்து கூகுள் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: பத்திரிகையாளர்கள், போலிச் செய்திகளை நம்பி ஏமாறுவதை தடுக்கவும், உண்மையான தகவல்களை அடையாளம் காணவும், கூகுள் நியூஸ், ஐ.ஐ.டி.என்., திட்டத்தில் பயிற்சி அளிக்கப்படும். முதற்கட்டமாக, 200 பத்திரிகையாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆங்கிலம் மற்றும், தமிழ், தெலுங்கு, வங்கம், மராத்தி, கன்னடம், ஹிந்தி ஆகிய ஆறு பிராந்திய மொழிகளில், ஐந்து நாட்கள் பயிற்சி தரப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்படும். அவர்கள், முக்கிய நகரங்களில் நிறுவனம் ஏற்பாடு செய்யும் முகாம்களில், பிற பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளிப்பர்.
1– -2 நாட்கள் அல்லது அரை நாள் நடைபெறும் பயிற்சி முகாம்களில், வலைதளங்களில் தகவல்களின் உண்மைத் தன்மையை பரிசோதிப்பது, தகவல் அளிப்பதில் ஒழுங்குதன்மையை உருவாக்குவது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும். இந்த வகையில், அடுத்த ஓராண்டிற்குள், 8,000 பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|