பதிவு செய்த நாள்
20 ஜூன்2018
00:26
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், பருவமழை காரணமாக தென்னைநார் உற்பத்தி முடங்கியுள்ள நிலையில், விலை உயர்ந்து வருகிறது. இதனால், இருப்பு வைக்கப்பட்டுள்ள நாரை உலர வைக்கும் பணிகள் வேகம் பிடித்துள்ளன.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில், 350க்கும் மேற்பட்ட தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் உற்பத்தி செய்யப்படும் நார், வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. கடந்த மாதம், 22ம் தேதி முதல் தென் மேற்கு பருவ மழை பரவலாக பெய்வதால், உற்பத்தி செய்யப்படும் தென்னை நாரை உலர வைக்க முடியாமல், உற்பத்தி முடங்கியது.
இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக, பருவமழையின் தாக்கம் குறைந்துள்ளது. பல இடங்களில் நார் உற்பத்தி முடங்கியுள்ள நிலையில், விலை உயர்ந்து வருகிறது. இருப்பு வைத்துள்ள நாரை உலர வைக்கும் பணி, தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. நார் உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘தென்னை நாருக்கு ஏற்பட்ட தட்டுப்பாடால், ஒரே நாளில் பண்டலுக்கு, 40 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.
‘தற்போது, 30 கிலோ நார் பண்டல், 580 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பருவமழை தொடர்ந்தால், விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. அதனால், மழையில்லாத போது, நார் உலர வைக்கிறோம்’ என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|