சந்தா கோச்சார் விவகாரம்; இரு நிறுவனங்கள் ஆய்வுசந்தா கோச்சார் விவகாரம்; இரு நிறுவனங்கள் ஆய்வு ... பங்கு வெளியீட்டில் ரூ.35,000 கோடி திரட்ட வாய்ப்பு பங்கு வெளியீட்டில் ரூ.35,000 கோடி திரட்ட வாய்ப்பு ...
நுால் ஏற்றுமதியில் அச்சுறுத்தும் வியட்நாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2018
00:17

கோவை : ‘‘இந்­திய நுால் ஏற்­று­மதி சந்­தையை வியட்­நாம் கைப்­பற்றி வரு­கிறது. இப்­பி­ரச்­னைக்கு தீர்வு காண, மத்­திய அரசு உதவ வேண்­டும்,’’ என, காட்­டன் டெக்ஸ்­டைல்ஸ் எக்ஸ்­போர்ட் புர­மோ­ஷன் கவுன்­சி­லின் (டெக்ஸ்­பு­ரோ­சில்) தலை­வர் உஜ்­வால் லகோடி தெரி­வித்­தார்.

கோவை­யில், தென்­னிந்­திய மில்­கள் சங்­கத்­தி­ன­ரு­டன் (சைமா) நடை­பெற்ற ஆலோ­சனை கூட்­டத்­துக்­கு­ பின், அவர் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது: கடந்த, 2013 – 14ம் ஆண்­டில், 13,100 லட்­சம் கிலோ­வாக இருந்த இந்­திய நுால் ஏற்­று­மதி, 2017 – 18ம் ஆண்­டில் 10,970 லட்­சம் கிலோ­வாக குறைந்­து­விட்­டது. இந்த கால­கட்­டத்­தில், வியட்­நாம் முக்­கிய போட்­டி­யா­ள­ராக உரு­வெ­டுத்து வரு­கிறது. உலக வர்த்­தக ஒப்­பந்­தங்­கள் கார­ண­மாக, வியட்­நாம் பொருட்­கள் இறக்­கு­ம­திக்கு வரி­வி­லக்கு கிடைத்­தி­ருப்­ப­தால், இந்­தி­யா­வின் நுால் ஏற்­று­மதி சந்­தையை அந்­நாடு கைப்­பற்றி வரு­கிறது.

முக்­கி­ய­மாக சீன சந்­தையை, வியட்­நா­மி­டம் இந்­தியா இழந்து வரு­கிறது. சீனா­வுக்­கான வியட்­நாம் ஏற்­று­மதி, இந்­தி­யா­வு­டன் ஒப்­பி­டு­கை­யில், 22.8 சத­வீ­தம் அதி­க­ரித்­து உள்­ளது. உல­க­ள­வில் 47 சத­வீத நுாலை, சீனா இறக்­கு­மதி செய்­கிறது. நமது ஏற்­று­மதி சந்­தையை வியட்­நாம் கைப்­பற்­று­வது மிக முக்­கி­ய­மான பிரச்னை. இப்­பி­ரச்­னைக்கு தீர்வு காண, மத்­திய அரசு உதவ வேண்­டும்.

உல­க­ள­வில், 2015ம் ஆண்­டில், 30 சத­வீ­த­மாக இருந்த இந்­திய நுால் ஏற்­று­மதி, 2017ம் ஆண்­டில், 25 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. கடந்த, 2012 – 13ல் 2,500 லட்­சம் கிலோ­வாக இருந்த வியட்­நா­மின் ஏற்­று­மதி, 2017 –18ல் 8,810 லட்­சம் கிலோ­வாக உயர்ந்­தி­ருக்­கிறது. உல­க­ள­வில் இரண்­டா­வது நுால் ஏற்­று­மதி நாடாக வியட்­நாம் உரு­வெ­டுத்து வரு­கிறது.

இந்­திய ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு, 2013 –14 கால­கட்­டத்­தில், 6 முதல், 7 சத­வீத ஏற்­று­மதி சலு­கை­கள் இருந்­தன. தற்­போது, 1.2 சத­வீத டூட்டி டிரா பேக் சலுகை மட்­டுமே உள்­ளது. 3 – 4 சத­வீத சலு­கை­கள் வழங்­கப்­பட வேண்­டும் என்­பது எங்­க­ளின் எதிர்­பார்ப்பு. இவ்­வாறு, அவர் கூறினார்.

ஜி.எஸ்.டி., வரம்புக்குள் பெட்ரோல், மின்சாரம்!
‘சைமா’ தலை­வர் நட­ராஜ் கூறு­கை­யில், ‘‘பெட்­ரோல், டீசல், மின்­சா­ரம் ஆகி­யவை, ஜி.எஸ்.டி., வரம்­புக்­குள் வரா­த­தால், அவற்­றுக்கு செலுத்­தும் வரியை எங்­க­ளால் ஏற்­று­ம­தி­யின்­போது திரும்ப பெற முடி­வ­தில்லை. இவற்றை, ஜி.எஸ்.டி., வரம்­புக்­குள் கொண்டு வந்­தால், எங்­க­ளால் வரியை திரும்ப பெற முடி­யும். மத்­திய அரசு இதற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்,’’ என்­றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)