பங்கு வெளியீட்டில் ரூ.35,000 கோடி திரட்ட வாய்ப்புபங்கு வெளியீட்டில் ரூ.35,000 கோடி திரட்ட வாய்ப்பு ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.79 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.79 ...
ஆகஸ்டு 1 முதல் சுங்க வரி உயர்வு; டிரம்ப் அதிரடிக்கு இந்தியா பதிலடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2018
00:21

புதுடில்லி : அமெ­ரிக்­கா­வில் இருந்து இறக்­கு­ம­தி­யா­கும், 29 பொருட்­க­ளுக்­கான சுங்க வரியை, மத்­திய அரசு உயர்த்­தி­யுள்­ளது.

அமெ­ரிக்க அதி­பர் டொனால்டு டிரம்ப், உருக்கு மற்­றும் அலு­மி­னி­யம் இறக்­கு­ம­திக்கு, முறையே, 25 மற்­றும் 10 சத­வீ­தம் வரி விதித்­துள்­ளார். இத­னால், அமெ­ரிக்­கா­விற்கு, உருக்கு மற்­றும் அலு­மி­னி­யப் பொருட்­களை ஏற்­று­மதி செய்­வ­தில், கூடு­த­லாக, 1,600 கோடி ரூபாய் வரிச் சுமையை இந்­தியா சந்­திக்க நேர்ந்­துள்­ளது. இதை­ய­டுத்து, அமெ­ரிக்கா, சர்­வ­தேச வர்த்­தக விதி­மு­றை­களை மீறி­யுள்­ள­தாக, இந்­தியா, உலக வர்த்­தக அமைப்­பி­டம் புகார் அளித்­துள்­ளது.

அத்­து­டன், அமெ­ரிக்­கா­வின் உத்­த­ர­வால் ஏற்­படும் இழப்பை ஈடு செய்ய, அங்­கி­ருந்து இறக்­கு­ம­தி­யா­கும், 800 சி.சி., இன்­ஜின் திற­னுக்கு மேற்­பட்ட மோட்­டார் சைக்­கிள், ஆப்­பிள், பாதாம் உள்­ளிட்ட, 30 பொருட்­க­ளுக்கு, 50 சத­வீ­தம் வரை கூடு­தல் வரி விதிக்க, மத்­திய அரசு முடிவு செய்­தது.

கடந்த வாரம், உலக வர்த்­தக அமைப்­பி­டம் வரி விதிப்பு பொருட்­கள் பட்­டி­யலை வழங்கி, அவற்­றுக்­கான வரிச் சலு­கை­கள் திரும்­பப் பெறப்­படும் என, தெரி­வித்­தது. இந்­நி­லை­யில், மோட்­டார் சைக்­கிள் தவிர்த்து, அமெ­ரிக்­கா­வில் இருந்து இறக்­கு­ம­தி­யா­கும், 29 பொருட்­க­ளுக்கு கூடு­தல் வரி விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக, மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

இது குறித்து, மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: அமெ­ரிக்­கா­வில் இருந்து இறக்­கு­ம­தி­யா­கும் கொண்­டைக்­க­ட­லைக்கு, சுங்க வரி, 60 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது. துவ­ரம் பருப்­புக்கு, வரி, 30 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. போரிக் அமி­லம் மற்­றும் வார்­ப­டத் தொழிற்­சா­லை­க­ளுக்­கான, ‘பைன்­டர்’ பொருட்­க­ளின் இறக்­கு­மதி வரி, 7.5 சத­வீ­த­மாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

ரசா­யன மாற்­றத்­திற்­கான மூலக்­கூ­று­கள் இறக்­கு­ம­திக்கு, 10 சத­வீத வரி விதிக்­கப்­பட்­டுள்­ளது. ‘அர்­டி­மியா’ எனப்­படும், ஒரு வகை இறால்­க­ளுக்கு, சுங்க வரி, 15 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது. ஆப்­பிள், பேரிக்­காய், போல்­டு­கள், நட்­டு­கள், ஸ்க்­ரூக்­கள், ரிவிட்­டு­கள், இரும்பு மற்­றும் உருக்கு பொருட்­கள், ஸ்டெ­யின்­லெஸ் ஸ்டீல் தக­டு­கள், டியூப், பைப் பிட்­டிங்­ உள்­ளிட்ட பொருட்­க­ளுக்கு, சுங்க வரி உயர்த்­தப்­பட்­டுள்­ளது.

இந்த வரி விதிப்பு, ஆக., 1 முதல் அம­லுக்கு வரும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்­கா­வுக்கு ஆண்­டுக்கு, 10 ஆயி­ரம் கோடி ரூபாய் மதிப்­புள்ள, உருக்கு மற்­றும் அலு­மி­னி­யப் பொருட்­களை, இந்­தியா ஏற்­று­மதி செய்­கிறது. அவற்­றுக்­கான வரியை, அமெ­ரிக்கா உயர்த்­தி­யுள்­ள­தால், இந்­தி­யா­வுக்கு, கூடு­த­லாக, 1,6௦௦ கோடி ரூபாய் இழப்பு ஏற்­படும்.

ஐரோப்பாவும்...
ஐரோப்­பிய கூட்­ட­மைப்­பும், அமெ­ரிக்க பொருட்­க­ளுக்கு, சுங்க வரியை, 25 சத­வீ­தம் உயர்த்­தி­யுள்­ளது. பிஸ்­கட், வேர்க்­க­டலை வெண்­ணெய், ஹார்லி டேவிட்­சன் மோட்­டார் சைக்­கிள் ஆகி­ய­வற்­றின் இறக்­கு­ம­திக்கு, 22 ஆயி­ரத்து, 400 கோடி ரூபாய் மதிப்­பிற்கு, வரி விதிக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக, அமெ­ரிக்க அதி­பர் டொனால்டு டிரம்­பின் குடி­ய­ரசு கட்சி ஆளும் மாகா­ணங்­களில் உற்­பத்­தி­யா­கும் பொருட்­களை தேர்ந்­தெ­டுத்து, வரி உயர்த்­தப்­பட்­டுள்­ளது. இந்த வரி விதிப்பு, இன்று முதல் அம­லுக்கு வரு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)