பதிவு செய்த நாள்
23 ஜூன்2018
00:21
குறு, சிறு தொழில் நிறுவனங்கள், கடன் தொகைக்கான வட்டி செலுத்தும் கால அளவை, 180 நாட்கள் வரை நீட்டித்து, இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.குறு, சிறு தொழில் நிறுவனங்கள், பெற்ற கடன் தொகைக்கான வட்டி செலுத்தும் கால அளவு, 90 நாட்களாக உள்ளது. இதனால், குறிப்பிட்ட கால அளவுக்குள் வட்டியை செலுத்த முடியவில்லை. எனவே, ‘கால அளவை அதிகப்படுத்த வேண்டும்’ என, நிறுவனங்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், கடன் மீதான வட்டி தொகையை செலுத்தும் கால அளவை, 90 நாட்களிலிருந்து, 180 நாட்களாக உயர்த்தி, இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான சங்கப் பொது செயலர், மோகன் கூறியதாவது: குறு, சிறு தொழில் நிறுவனங்கள், கடன் தொகைக்கான வட்டியை செலுத்தும் கால அளவு, 180 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இது, 2017, செப்., 1 முதல், 2018, டிச., 31 வரையிலான காலத்தில், வட்டி செலுத்த தவறியவர்களுக்கு, 180 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.வரும், 2019ம் ஆண்டு ஜனவரி, 1 முதல், பிப்ரவரி, 28 வரையிலான காலத்தில், வட்டி செலுத்த தவறுபவர்களுக்கு, 150 நாட்கள் அவகாசமும்; 2019ம் ஆண்டு மார்ச், 1 முதல், ஏப்ரல், 30 வரை, வட்டி செலுத்த தவறுபவர்களுக்கு, 120 நாட்கள் அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.மே, 1ம் தேதி முதல், மீண்டும், 90 நாட்கள் அவகாசமாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், சிக்கலில் இருக்கும் குறு, சிறு நிறுவனங்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வட்டி தொகையை செலுத்த, ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், வாராக்கடன் அதிகரிப்பதும் தடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|