பதிவு செய்த நாள்
23 ஜூன்2018
00:24
புதுடில்லி: ‘‘கடந்த இரண்டரை ஆண்டுகளில், ‘காதி’ என்ற பெயரில் போலியாக துணிகள், ஆடைகள் ஆகியவற்றை விற்பனை செய்த, 222 நிறுவனங்களுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது,’’ என, காதி கிராமோத்யோக் ஆணைய தலைவர், வி.கே.சக்சேனா தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:பல நிறுவனங்கள், காதி பொருட்கள் எனக் கூறி, மக்களை ஏமாற்றுகின்றன. ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே, காதி முத்திரையுடன், காதி பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். இந்த உரிமத்திற்காக, குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஆனால், விற்பனையில் எவ்வித பங்கும் கோரப்படுவதில்லை. வசூலிக்கப்படும் தொகை, கைத்தறி நெசவாளர்களின் நல்வாழ்விற்கு பயன்படுத்தப்படுகிறது.பல நிறுவனங்கள், கையால் நெசவு செய்த காதி துணிகள் எனக் கூறி, விற்கின்றன. அவ்வாறு விற்பதாக இருந்தாலும், ஆணையத்தின் காதி முத்திரை உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.சட்ட விரோதமாக, ‘சர்க்கா’ முத்திரையுடன், காதி எனக் கூறி, ஆடைகளை விற்பனை செய்த, ‘பேப் இந்தியா’ நிறுவனம் மீது, 525 கோடி ரூபாய் இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|