பதிவு செய்த நாள்
28 ஜூன்2018
00:10

புதுடில்லி : சரக்கு மற்றும் சேவை வரியை நிர்வகிக்கும் நிறுவனமான, ஜி.எஸ்.டி.என்., அதன் மென்பொருளை, மூன்றாம் தரப்பு தணிக்கைக்கு உட்படுத்த இருப்பதாக, அதன் தலைமை செயல் அதிகாரி, பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி.என்., நிறுவனம், சரக்கு மற்றும் சேவை வரியை வசூலிக்க தேவையான தகவல் தொழில்நுட்பத்தை வழங்கி வருகிறது. இதற்கு தேவைப்படும் மென்பொருளை, இன்போசிஸ் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது. இதில், 1.11 கோடி வணிகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்நிறுவனத்தின் மென்பொருள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை, மூன்றாம் தரப்பு தணிக்கைக்கு உட்படுத்த இருப்பதாக, பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், மூன்றாம் தரப்பு தணிக்கைக்கு தங்களை உட்படுத்திக்கொள்வது வழக்கமான நடைமுறையாக உள்ளது. அதே போன்ற நடைமுறையை, ஜி.எஸ்.டி.என்., நிறுவனத்திலும் கொண்டு வர இருக்கிறோம். எப்போதெல்லாம், ஜி.எஸ்.டி., குறித்த சட்டங்கள் மாற்றத்துக்கு உள்ளாகிறதோ அல்லது எப்போதெல்லாம் சுற்றறிக்கை வருகிறதோ அப்போதெல்லாம், இன்போசிஸ் மூலம் நாங்கள் மென்பொருளில் மாற்றம் செய்கிறோம்.
இந்த மாற்றங்களை மூன்றாம் தரப்பு தணிக்கைக்கு உட்படுத்த விரும்புகிறோம். கடந்த, 2017 ஜூலை, 1ம் தேதி முதல், ஜி.எஸ்.டி.என்., நிறுவனம், 11.5 கோடி வரி தாக்கல்களையும், 376 கோடி விலை பட்டியல்களையும் கையாண்டு உள்ளது. தற்போது, 1.11 கோடி வணிகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 63.76 லட்சம் வணிகங்கள், சேவை வரி மற்றும் வாட் வரியிலிருந்து மாறி வந்துள்ளன. மேலும், 47.72 லட்சம் வணிகங்கள், புதிதாக பதிவு பெற்றுள்ளன. 17.61 லட்சம் வணிகங்கள், கலவை வரி திட்டத்தை, ஜி.எஸ்.டி.,யின் கீழ் ஏற்றுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|