‘மைண்டு டிரீ’ நிறுவனர் பங்குகள் விற்பனை‘மைண்டு டிரீ’ நிறுவனர் பங்குகள் விற்பனை ... முதலீட்டை உடனே திரும்ப பெறுங்கள்: ஜெப்பே முதலீட்டை உடனே திரும்ப பெறுங்கள்: ஜெப்பே ...
ஏற்றுமதியாளருக்கு ரூ.340 கோடி சலுகை; சுங்க வரி இணை கமிஷனர் தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2018
00:14

திருப்பூர் : ‘‘நடப்பு நிதி­யாண்­டில், ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு, 340 கோடி ரூபாய் சலுகை தொகை வழங்­கப்­பட்­டுள்­ளது,’’ என, சுங்க வரி இணை கமி­ஷ­னர் தெரி­வித்­தார்.

திருப்­பூர், திரு­மு­ரு­கன்­பூண்­டி­யில், ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்­கான, ஜி.எஸ்.டி.,கருத்­த­ரங்­கம் நேற்று நடந்­தது. ஆயத்த ஆடை ஏற்­று­மதி மேம்­பாட்டு கவுன்­சில் (ஏ.இ.பி.சி.,) துணை தலை­வர் சக்­தி­வேல் தலைமை வகித்து பேசு­கை­யில், ‘‘ஜி.எஸ்.டி.,ரீபண்டு அதி­க­ளவு நிலுவை இருந்­தது. தற்­போது, பெரும்­பா­லான நிலு­வைத் தொகை, ஏற்­று­ம­தி­யா­ள­ருக்கு வழங்­கப்­பட்­டு­விட்­டது. தொழில் சிறப்­பாக நடக்க, உரிய காலத்­தில், அரசு சலுகை தொகை, ரீபண்டு கிடைப்­பது மிக­வும் அவ­சி­யம்,’’ என்­றார்.

திருச்சி மண்­டல சுங்க வரித்­துறை இணை கமி­ஷ­னர் முக­மது நவ்­பால் பேசி­ய­தா­வது: ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­படும் சலு­கை­களில், ஸ்டேட் லெவிஸ், டியூட்டி டிரா­பேக், ஜி.எஸ்.டி., ரீபண்டு மிக முக்­கி­ய­மா­ன­தாக உள்­ளது.ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­கல் செய்­த­வர்­க­ளுக்கு, ரீபண்டு வழங்­கு­வ­தில், ஒரு சில தொழில்­நுட்ப சிக்­கல்­கள் ஏற்­ப­டு­கின்­றன; அவற்றை சரி­செய்­யும் பணி­கள் நடந்­து­வ­ரு­கின்­றன. 5,500 ஐ.ஜி.எஸ்.டி., ஏற்­று­மதி ரசீ­து­க­ளுக்கு, 140 கோடி ரூபாய் ரீபண்டு வழங்­கப்­பட வேண்­டும். இதில், 4,400 ஏற்­று­மதி ரசீ­துக்கு, 130 கோடி ரூபாய் வழங்க அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

நடப்பு நிதி­யாண்­டில் இது­வரை, ஸ்டேட் லெவிஸ், 200 கோடி; ஐ.ஜி.எஸ்.டி., 75 கோடி; டியூட்டி டிரா­பேக், 65 கோடி என, ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு, மொத்­தம், 340 கோடி ரூபாய் சலுகை தொகை வழங்­கப்­பட்­டு உள்­ளது. இவ்­வாறு அவர் பேசி­னார்.

மத்­திய, ஜி.எஸ்.டி., துணை கமி­ஷ­னர் சுப்­ர­ம­ணி­யன் பேசு­கை­யில், ‘‘திருப்­பூ­ரில், 2017 அக்., முதல் இது­வரை, 498 விண்­ணப்­பங்­க­ளுக்கு, 118.23 கோடி ரூபாய் ரீபண்டு வழங்­கப்­பட்­டது,’’ என்­றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)