ஏற்றுமதியாளருக்கு ரூ.340 கோடி சலுகை; சுங்க வரி இணை கமிஷனர் தகவல்ஏற்றுமதியாளருக்கு ரூ.340 கோடி சலுகை; சுங்க வரி இணை கமிஷனர் தகவல் ... இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 69 ஐ எட்டியது இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 69 ஐ எட்டியது ...
முதலீட்டை உடனே திரும்ப பெறுங்கள்: ஜெப்பே
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2018
00:15

புது­டில்லி : இந்­தி­யா­வின் பிர­ப­ல­மான, கிரிப்­டோ­க­ரன்சி எக்ஸ்­சேஞ்ச் ஆன, ஜெப்பே, அவ­சர அறி­விப்பு ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. தங்­கள் முத­லீட்டை ரூபா­யாக திரும்ப பெற்­றுக்­கொள்ள விரும்­பும் வாடிக்­கை­யா­ளர்­கள், உடனே அணுகி, பணத்தை பெற்­றுக்­கொள்­ளு­மாறு அந்­நி­று­வ­னம் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

கடந்த ஏப்­ர­லில், ரிசர்வ் வங்கி ஒரு சுற்­ற­றிக்­கையை, அதன் கட்­டுப்­பாட்­டுக்­குள் வரும் வங்­கி­கள் உள்­ளிட்ட நிதி நிறு­வ­னங்­க­ளுக்கு அனுப்­பி­யது. அதில், கிரிப்­டோ­க­ரன்சி எனும் மெய்­நி­கர் நாணய வணி­கத்­தில் ஈடு­படும் நிறு­வ­னங்­க­ளு­ட­னான தொடர்பு தடை செய்­யப்­ப­டு­வ­தா­க­வும், மூன்று மாதங்­க­ளுக்­குள்­ளாக, வங்­கி­கள் இத்­த­கைய வணி­கத்­தில் ஈடு­படும் நிறு­வ­னங்­க­ளின் தொடர்­பி­லி­ருந்து வெளி­யே­றி­வி­டும்­ப­டி­யும் அறி­வு­றுத்தி இருந்­தது. அந்த காலக்­கெடு வரும் ஜூலை, 6ம் தேதி­யு­டன் முடி­வ­டை­கிறது.

இந்­நி­லை­யில், மெய்­நி­கர் நாணய சந்­தை­யான ஜெப்பே, முத­லீட்டை ரூபா­யாக திரும்ப பெற விரும்­பும் வாடிக்­கை­யா­ளர்­கள், விரைந்து தொகையை பெற்­றுக்­கொள்­ளு­மாறு அறி­விப்பு செய்­துள்­ளது.

இது குறித்து அந்­நி­று­வ­னம் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது: ரிசர்வ் வங்­கி­யின் அறி­விப்பை அடுத்து, வங்­கி­களில் ரூபா­யாக டெபா­சிட் செய்­வதோ அல்­லது எடுப்­பதோ இனி இய­லாத ஒன்­றா­கி­வி­டும். இத­னால், மெய்­நி­கர் நாண­யங்­களில் ரூபா­யில் வர்த்­த­கம் செய்­வது நின்­று­வி­டும். எனவே, வாடிக்­கை­யா­ளர்­கள் பணத்தை திரும்ப பெற விரும்­பி­னால், உடனே வந்து பெற்­றுக்­கொள்­ள­வும். காலக்­கெ­டு­வுக்கு பிறகு முடி­யா­மல் போய்­வி­டும்.

மெய்­நி­கர் நாணய வணி­கத்­தில் ஈடு­பட்­டுள்ள நிறு­வ­னங்­கள், ரிசர்வ் வங்­கி­யின் இந்த சுற்­ற­றிக்­கைக்கு எதி­ராக உச்ச நீதி­மன்­றத்­துக்கு சென்­றுள்ளன. இவ்­வாறு ஜெப்பே அறி­வித்­துள்­ளது. இதற்­கி­டையே மெய்­நி­கர் நாணய வணிக நிறு­வ­னங்­கள், ரிசர்வ் வங்­கிக்கு கீழ் வராத, பொதுத்­துறை வங்­கி­யான, ஸ்டேட் பேங்க் ஆப் சிக்­கிம் – ஐ ஒரு வாய்ப்­பாக பயன்­ப­டுத்­த­லாம் என, தெரி­வித்­துள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)