பதிவு செய்த நாள்
01 ஜூலை2018
02:42
புதுடில்லி: கார்ப்பரேட் நிறுவன இயக்குனர்களின் தனிப்பட்ட மொபைல்போன் எண் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது.சட்ட விரோத பணப் பரிமாற்றத்திற்காக உருவாக்கப்படும் போலி நிறுவனங்களை களையெடுக்கும் பணியை, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் முடுக்கி விட்டுள்ளது.இதன்படி, தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல், நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யாமல் உள்ள நிறுவனங்களின் பதிவு, ரத்து செய்யப்படுகிறது. இந்த வகையில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்களின் பதிவு நீக்கப்பட்டுள்ளது; அவற்றின் மூன்று லட்சம் இயக்குனர்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுடன், இதர நிறுவன இயக்குனர்களும், தங்கள் தனிப்பட்ட மொபைல்போன் எண், மின்னஞ்சல் முகவரி விபரங்களை தெரிவிக்கும் திட்டம் விரைவில் அமலாக உள்ளது.இது குறித்து, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:அனைத்து நிறுவன இயக்குனர்களும், தங்களை பற்றிய முழு விபரங்களை தெரிவிக்க, ‘டி.ஐ.ஆர் –3 கே.ஒய்.சி.,’ என்ற மின்னணு படிவம் வெளியிடப்படும்.இதை, இந்தாண்டு மார்ச் இறுதி வரை, ‘டின்’ எண் வழங்கப் பெற்ற இயக்குனர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிரிவில் உள்ள இயக்குனர்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.அதில், தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் மொபைல்போன் எண், இ – மெயில் முகவரி உள்ளிட்ட விபரங்களை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். இந்த தகவல்கள், ‘ஓ.டி.பி.,’ எனப்படும் மொபைல்போனில் ஒருமுறை அனுப்பும் பாஸ்வேர்ட் மூலம் உறுதி செய்யப்படும். இந்த படிவத்திற்கு, பட்டய கணக்காளர், நிறுவன செயலர் அல்லது செலவு நிர்வாக கணக்காளரிடம் சான்று கையொப்பம் பெற வேண்டும்.பூர்த்தி செய்த படிவத்தை, ஆக., 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு அளிக்காத இயக்குனர்கள், ‘எம்.சி.ஏ., – 21’ படிவத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியை இழப்பர்; அவர்களின் டின் முடக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|