பதிவு செய்த நாள்
02 ஜூலை2018
00:48
இந்தியாவில் இணைய பயனாளிகளில் நான்கில் ஒருவர் இணைய மோசடிக்கு இலக்காவதாக எக்ஸ்பிரியன் டிஜிட்டல் கன்ஸ்யுமர் இன்சைட்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது. அறிக்கையின் மற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:
இணைய பரிவர்த்தனையில் ஈடுபடும் போது, 24 சதவீதத்தினர் நேரடியாக இணைய மோசடிக்கு இலக்காகி உள்ளனர். 90 சதவீத இந்தியர்கள் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துகின்றனர். மேலும், 50 சதவீதத்தினர் வங்கிகளுடன் தரவுகளை பகிர்ந்து கொள்வதை வசதியாக உணர்ந்துள்ளனர். 30 சதவீதத்தினர் பிராண்டுகளுடன் தகவல்களை பகிர்வதை ஒரு பிரச்சனையாக கருதவில்லை. 51 சதவீதத்தினர் சிறப்பு சலுகைகளை பெறுவதற்காக, தனிப்பட்ட தகவல்களையும் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளன.
இந்தியர்கள் மத்தியில் இணைய பயன்பாடு மற்றும் டிஜிட்டல் சேவை பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|