பதிவு செய்த நாள்
04 ஜூலை2018
00:17
புதுடில்லி:மும்பையைச் சேர்ந்த, பிளமிங்கோ டிராவல் ரீடெய்ல் நிறுவனத்தின், புதிய பங்கு வெளியீட்டிற்கு, ‘செபி’ ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் பங்கு வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என, தெரிகிறது.
துபாயைச் சேர்ந்த பிளமிங்கோ இன்டர்நேஷனல் குழுமத்தின் துணை நிறுவனம், பிளமிங்கோ டிராவல் ரீடெய்ல்.இந்நிறுவனம், சுற்றுலா பயணியருக்கு வரிவிலக்கு பொருட்களை விற்பனை செய்யும் கடைகளையும், அவற்றுக்கான வளாகங்களையும் நிர்வகித்து வருகிறது.
பங்கு வெளியீட்டின் மூலம், 2,600 கோடி ரூபாய் திரட்ட, பிளமிங்கோ திட்டமிட்டு உள்ளது.இத்தொகையின் ஒருபகுதி, பிளமிங்கோ இண்டர்நேஷனல் நிறுவனத்திடம் இருந்து, பிரிட்டனைச் சேர்ந்த பிளமிங்கோ இன்டர்நேஷனல் நிறுவனத்தின், 100 சதவீத பங்குகளை வாங்க பயன்படுத்திக் கொள்ளப்படும்.
அத்துடன், பிளமிங்கோ டியூட்டி பிரி ஷாப் நிறுவனத்தின், அனைத்து பங்குகளையும், ஒரு சில நிறுவனர்களிடம் இருந்து, குறிப்பிடத்தக்க பங்குகளையும் வாங்க, பிளமிங்கோ திட்டமிட்டு உள்ளது.பிளமிங்கோ இன்டர்நேஷனல் நிறுவனம், 25 நாடுகளில், 300க்கும் அதிகமான வரிவிலக்கு கடைகளை நிர்வகித்து வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|