பதிவு செய்த நாள்
04 ஜூலை2018
00:19
புதுடில்லி:இந்தியாவில் ‘பிட்காய்ன்’ சந்தைகள் உடனான நிதிச் சேவைகளை நிறுத்துவதற்கு, ரிசர்வ் வங்கி விதித்த, ‘கெடு’ நாளையுடன் முடிகிறது.
ரிசர்வ் வங்கி, ஏப்., 6ல் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில் ‘பிட்காய்ன் உள்ளிட்ட, வலைதள கரன்சி வர்த்தகம் சார்ந்த நிதிச் சேவைகளை, மூன்று மாதங்களுக்குள் நிறுத்த வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது.இதை எதிர்த்து, வலைதள நிறுவனங்கள் கூட்டமைப்பான, ஐ.ஏ.எம்.ஏ.ஐ., சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
அதில், வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை, மூன்று மாதங்களுக்கு பின், பிட்காய்ன் வர்த்தகத்திற்கு, நிதிச் சேவை வழங்கக் கூடாது என, ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவிற்கு தடை கோரப்பட்டது. நேற்று, இந்த கோரிக்கையை ஏற்க, சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.
ரிசர்வ் வங்கி விதித்த, ‘கெடு’ நாளையுடன் முடிவடைகிறது. அதன்பின், மெய்நிகர் கரன்சி சந்தையில், பிட்காய்ன் வர்த்தகத்திற்கு, வங்கிகள், நிதிநிறுவனங்கள் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாது.இதனால், ரிசர்வ் வங்கி பலமுறை எச்சரித்தும், பிட்காயின் போன்ற வலைதள கரன்சியில் முதலீடு செய்துள்ளோர், பெரும் இழப்பை சந்திக்க நேரும்.
அத்துடன், பிட்காய்ன் பரிவர்த்தனையில் முன்னணியில் உள்ள, ‘யுனோ காய்ன், ஸெப்பே’ உள்ளிட்ட நிறுவனங்களும் பாதிக்கப்படும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|