தொழில் நுட்ப மேம்பாட்டு நிதி ‘போர்ஜிங்’ சங்கம் கோரிக்கைதொழில் நுட்ப மேம்பாட்டு நிதி ‘போர்ஜிங்’ சங்கம் கோரிக்கை ...  செலுத்தும் ஜி.எஸ்.டி., அரசுக்கு சென்றடைகிறதா?  மத்திய அரசு அதிகாரி கண்டுபிடித்த புதிய செயலி செலுத்தும் ஜி.எஸ்.டி., அரசுக்கு சென்றடைகிறதா? மத்திய அரசு அதிகாரி ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இந்தாண்டு, ‘நிப்டி’ 11,380 புள்ளிகளை எட்டும்: ‘நோமுரா’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2018
00:20

புதுடில்லி:‘இந்­தாண்டு, தேசிய பங்­குச் சந்­தை­யின், ‘நிப்டி’ குறி­யீடு, 11 ஆயி­ரம் புள்­ளி­களை தாண்­டும்’ என, ஜப்­பான் நிதிச் சேவை நிறு­வ­ன­மான, ‘நோமுரா’ கணித்­துள்­ளது.இது குறித்து இந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:
அடுத்­தாண்டு பொதுத் தேர்­தல் வரு­வ­தை­யொட்டி, இந்­திய பங்­குச் சந்­தை­களில் ஏற்ற, இறக்­கம் அதி­கம் இருக்­கும்.தற்­போது, ‘நிப்டி’ 10,700 புள்­ளி­கள் என்ற அள­வில் உள்­ளது. இது, டிசம்­ப­ரில், 11,380 புள்­ளி­களை எட்­டும்.நிதி துறை, குறிப்­பாக வங்கி, காப்­பீடு மற்­றும், வாக­னம், பெட்­ரோ­லி­யப் பொருட்­கள், கட்­டு­மா­னம், ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு நிறு­வன பங்­கு­க­ளின் மதிப்பு, அதி­க­மாக உள்­ளது.
மத்­தி­யில், பா.ஜ., ஆட்­சியை வீழ்த்த, எதிர்க்­கட்­சி­கள் மூன்­றா­வது அணியை உரு­வாக்க முயற்­சிக்­கின்­றன. இந்­நி­லை­யில், பா.ஜ., தலை­மை­யி­லான தேசிய ஜன­நா­யக கூட்­ட­ணியை விட்டு வில­கு­வ­தாக, சில கட்­சி­கள் மிரட்­டு­கின்­றன. இது­போன்ற அர­சி­யல் சூழல் கார­ண­மாக, பா.ஜ., மீண்­டும் ஆட்சி அமைக்­குமா என்ற கவலை, முத­லீட்­டா­ளர்­க­ளி­டம் ஏற்­பட்­டுள்­ளது. .ஜ.,வால், கூட்­டணி அரசு அமைக்க முடி­யா­மல் போனால், அது, பங்கு மதிப்பை பாதிக்­கும்.
கிராமப்புறம்வரும், 2020 மார்ச் வரை, ‘நிப்டி’யின் ஆண்டு சரா­சரி வரு­வாய், 24 சத­வீ­த­மாக இருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனி­னும், நிலை­யற்ற அர­சி­யல் சூழல், குறு­கிய கால வளர்ச்­சியை, கட்­டுப்­ப­டுத்­த­லாம்.தேர்­தல் ஆண்டு என்­ப­தால், கிரா­மப்­பு­றம் மற்­றும் வேளாண் வளர்ச்­சிக்­கான முக்­கி­யத்­து­வம் அதி­க­ரிக்­கும். அத­னால், கிரா­மப்­புற பொரு­ளா­தா­ரம் மற்­றும் அடிப்­படை கட்­ட­மைப்பு துறை சார்ந்த நிறு­வ­னங்­க­ளின் பங்­கு­க­ளுக்கு மவுசு கூடும்.
நுகர்­பொ­ருள் நிறு­வ­னங்­க­ளின் விற்­பனை, கிரா­மப்­பு­றங்­களில் அதி­க­ரித்­துள்­ளது. டிராக்­டர்­கள் மற்­றும் வாகன விற்­ப­னை­யும், அவற்­றுக்­கான கடன் தேவை­யும் உயர்ந்­துள்­ளது. இவை, கிரா­மப்­புற பொரு­ளா­தா­ரம் சூடு­பி­டித்து வரு­வதை குறிக்­கின்­றன.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)