பதிவு செய்த நாள்
04 ஜூலை2018
00:20
புதுடில்லி:‘இந்தாண்டு, தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடு, 11 ஆயிரம் புள்ளிகளை தாண்டும்’ என, ஜப்பான் நிதிச் சேவை நிறுவனமான, ‘நோமுரா’ கணித்துள்ளது.இது குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
அடுத்தாண்டு பொதுத் தேர்தல் வருவதையொட்டி, இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்ற, இறக்கம் அதிகம் இருக்கும்.தற்போது, ‘நிப்டி’ 10,700 புள்ளிகள் என்ற அளவில் உள்ளது. இது, டிசம்பரில், 11,380 புள்ளிகளை எட்டும்.நிதி துறை, குறிப்பாக வங்கி, காப்பீடு மற்றும், வாகனம், பெட்ரோலியப் பொருட்கள், கட்டுமானம், ஆரோக்கிய பராமரிப்பு நிறுவன பங்குகளின் மதிப்பு, அதிகமாக உள்ளது.
மத்தியில், பா.ஜ., ஆட்சியை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் மூன்றாவது அணியை உருவாக்க முயற்சிக்கின்றன. இந்நிலையில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு விலகுவதாக, சில கட்சிகள் மிரட்டுகின்றன. இதுபோன்ற அரசியல் சூழல் காரணமாக, பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்குமா என்ற கவலை, முதலீட்டாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. .ஜ.,வால், கூட்டணி அரசு அமைக்க முடியாமல் போனால், அது, பங்கு மதிப்பை பாதிக்கும்.
கிராமப்புறம்வரும், 2020 மார்ச் வரை, ‘நிப்டி’யின் ஆண்டு சராசரி வருவாய், 24 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், நிலையற்ற அரசியல் சூழல், குறுகிய கால வளர்ச்சியை, கட்டுப்படுத்தலாம்.தேர்தல் ஆண்டு என்பதால், கிராமப்புறம் மற்றும் வேளாண் வளர்ச்சிக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும். அதனால், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளுக்கு மவுசு கூடும்.
நுகர்பொருள் நிறுவனங்களின் விற்பனை, கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளது. டிராக்டர்கள் மற்றும் வாகன விற்பனையும், அவற்றுக்கான கடன் தேவையும் உயர்ந்துள்ளது. இவை, கிராமப்புற பொருளாதாரம் சூடுபிடித்து வருவதை குறிக்கின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|