பதிவு செய்த நாள்
05 ஜூலை2018
00:14
கோவை:பருத்தி பஞ்சு மற்றும் நுால் விலையில் நிலவும் நிலையற்ற தன்மையை எதிர்கொள்வது குறித்து, இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் (ஐ.டி.எப்.,) ஆலோசனை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பருத்தி சீசன் துவங்கிய நவம்பரில், 1 கண்டி (365 கிலோ) பருத்தி பஞ்சின் விலை, 38 ஆயிரத்து, 500 ரூபாயாக இருந்தது.ஆனால், ஜூன் மாதத்தில், 48 ஆயிரமாக உயர்ந்தது. இது, 24 சதவீத உயர்வாகும். இதே காலத்தில், 1 கிலோ, 30 கவுன்ட் நுால் விலை, 208 முதல், 237 ரூபாயாக, 17 சதவீதம் உயர்ந்தது.இது குறித்து தன் உறுப்பினர்களுக்கு, இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் சார்பில், கன்வீனர் பிரபு தாமோதரன் விடுத்துள்ள சுற்றறிக்கையில், ‘பருத்தி பஞ்சு விலையை, பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன. பஞ்சு விலை உயர்ந்தால், நுால் விலை உயரும்.
‘ஆண்டுதோறும் நிகழும் பருத்தி பஞ்சு விலை ஏற்ற இறக்கத்தை, வல்லுனர்கள் கூட கணிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே, பஞ்சாலைகள் வங்கிகளில் பேசி, குறுகிய கால கடன் பெற்று, பருத்தி பஞ்சு இருப்பு வைக்கலாம்.‘பாலியஸ்டர், விஸ்கோஸ் போன்ற செயற்கை பஞ்சுக்கு ஒரு பகுதி மாறலாம். வெளிநாட்டிலிருந்து பருத்தி இறக்குமதி செய்து, ஆண்டுக்கு இரண்டு மாதம் பயன்படுத்தலாம்.
‘ஜவுளி நிறுவனங்கள் தனியாக மட்டுமின்றி, குழுவாக இணைந்தும் செயல்பட்டால், வெற்றிகரமாக விலையேற்றத்தை சமாளிக்க முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|