பதிவு செய்த நாள்
06 ஜூலை2018
01:18
புதுடில்லி:டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், ‘நானோ’ கார், இறுதி மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது.
கடந்த ஜூன் மாதம், குஜராத் தொழிற்சாலையில், ஒரே ஒரு நானோ கார் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், மூன்று கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 25 கார்கள் தயாரிக்கப்பட்டன; 167 கார்கள் விற்பனை செய்யபபட்டன.டாடா குழும தலைவர், ரத்தன் டாடா, சாதாரண மக்களும் வாங்கும் வகையில், ஒரு லட்சம் ரூபாய்க்கு, நானோ கார் திட்டத்தை, 2009ல் அறிமுகப்படுத்தினார்.
ஆனால், இத்திட்டம், துவக்கத்தில் இருந்து பல்வேறு தொல்லைகளை சந்தித்து வந்தது. விவசாயிகள் எதிர்ப்பால், மேற்கு வங்கத்தில் இருந்து, நானோ கார் தொழிற்சாலை, குஜராத்தின் சனானந்த் நகருக்கு மாற்றப்பட்டது. விற்பனையான ஒருசில கார்கள், தீ விபத்திற்கு ஆளாகின. மெல்ல மெல்ல நானோவுக்கு வரவேற்பு குறைந்து வந்தது.ரத்தன் டாடா, ‘மலிவு விலை கார் என நானோவை அறிமுகப்படுத்தியது மிகப் பெரிய தவறு’ என, வெளிப்படையாகவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கார் தயாரிப்பும், விற்பனையும் ஒற்றை இலக்கத்திற்கு சரிந்து விட்டதால், 2019ல், நானோ கார் தயாரிப்பு தொடர வாய்ப்பில்லை என, கூறப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|