பதிவு செய்த நாள்
06 ஜூலை2018
01:20
திருப்பூர்:இணையதளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னை யால், நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்கள், ஜி.எஸ்.டி., ‘ரீபண்ட்’ விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.ஜி.எஸ்.டி.,யில், புதிய வர்த்தகர் பதிவு, ‘ரிட்டர்ன்’ தாக்கல், ‘ரீபண்ட்’ பெறுவது என, அனைத்தும் ஆன்-லைன் மயமாக்கப்பட்டுள்ளது.
இதற்காக, ஜி.எஸ்.டி., ‘போர்ட்டல்’ செயல்படுத்தப்படுகிறது. ஏற்றுமதி நிறுவனங்கள் செலுத்தும் வரியினங்களுக்கு, ‘ரீபண்ட்’ வழங்கப்படுகின்றன.பின்னலாடை நகரான திருப்பூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, அரசிடமிருந்து கிடைக்கும் இந்த ‘ரீபண்ட்’ தொகை, பெரிதும் கைகொடுக்கிறது. ஜூன் 30 முதல், ஜி.எஸ்.டி., தளத்தில், ‘ரீபண்ட்’ விண்ணப்பிப்பதற்கான பிரிவு, ‘மக்கர்’ செய்து வருகிறது.
நடப்பு காலத்துக்கான முறையான ஆவணங்களை பதிவேற்றம் செய்தாலும், ‘எதிர்காலத்துக்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்துள்ளதால் ஏற்க இயலாது’ எனவும், பதிவேற்றம் செய்த ஆவண, ‘பார்மேட்’ தவறு என்றும், பிழை செய்தி தோன்றுகிறது. இதனால், ஐந்து நாட்களாக வர்த்தகர்கள், ஜி.எஸ்.டி., ‘ரீபண்ட்’ விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
ஆடிட்டர் தனஞ்செயன் கூறியதாவது:ஜி.எஸ்.டி., தளத்தில் பிரச்னை உருவாகியுள்ளது. சரியான ஆவணங்களுடன் விண்ணப்பித்தாலும், எதிர்காலத்துக்கான ஆவணத்தை இணைப்பதாக கூறி, ஏற்றுக்கொள்ள மறுத்து, பிழை செய்தி தோன்றுகிறது. நாடு முழுவதும் உள்ள ஒட்டு மொத்த வர்த்தகர்களுக்கும் இதே நிலை தான்.மொபைல் போனில், ‘ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து, ஜி.எஸ்.டி., உதவி மையத்துக்கு விபரம் அனுப்பினாலும், எந்தவிதமான பதிலும் இல்லை; இணையதள கோளாறு சரி செய்யப்படாதவரை, வர்த்தகர்கள் ரீபண்ட் கேட்டு விண்ணப்பிக்க முடியாது. ரீபண்ட் தொகை கைக்கு கிடைப்பதிலும், காலதாமதம் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|